Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தீ பரவட்டும்" வார்த்தைக்கு தடை.. பராசக்தி படத்திற்கு சென்சார் நன்மை செய்திருக்கிறது.. தராசு ஷ்யாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாக வைத்து பராசக்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டமே மையக்கரு என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பராசக்தி திரைப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தில் மொத்தமாக 27 இடங்களில் வசனங்களை மாற்ற தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்பதால், படக்குழு வேறு வழியின்றி ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

Parasakthi Censor

அதில் குறிப்பாக இந்தி என் கனவை அழித்தது, இந்தி அரக்கி, இந்தி கத்துகிட்டு என்று வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகத் தலைப்பான தீ பரவட்டும் என்ற வார்த்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நீதி பரவட்டும் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற வசனமான "இங்கு யார் ஆண்டாலும் இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறான்" என்ற 22 நொடி வார்த்தையும் நீக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே விவாதமாகி இருக்கிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், படைப்பு சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இந்த படத்திற்கு என்று இல்லை..

பொதுவாகவே தணிக்கை வாரியத்தின் நடவடிக்கை மூலமாகவே கண்டறிய முடியும். உட்தா பஞ்சாப், பத்மாவத், சீதா vs ஸ்டெட் ஆஃப் கேரளா என்று ஏராளமான படங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மோடி, அமித்ஷா கோபித்துக் கொள்வார்கள் என்று தணிக்கை அதிகாரிகளே நினைக்கிறார்கள். இவர்களின் பதவியே அரசியல் பதவி தான்.

1964ல் வெளி வந்த புத்தகம் தீ பரவட்டும். அதன்பின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்.. 1930களில் இருந்தே தென்னிந்தியாவில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் தொடங்கிவிட்டது. அண்மையில் மறைந்த எல்.கணேசன் மொழிப்போர் போராட்ட தளபதி.. இந்த நூல் போராட்டத்தின் ஒரு பகுதி.. மொழிப்போர் உணர்வு குறித்த செய்திகளை இந்த தலைமுறைக்கு கொண்டு செல்லவில்லை.

தற்போது சென்சார் மூலமாக இளம் தலைமுறைக்கு இந்த செய்திகளை சொல்ல முடிகிறது. உண்மையில் சென்சார் நமக்கு நன்மையை தான் செய்திருக்கிறது. ஏனென்றால் சென்சார் கட் செய்யவில்லை என்றால், இதுதொடர்பான விவாதமே நடந்திருக்கிறது. படம் பார்த்து ஒவ்வொரு நபராக தேடி படிக்க வேண்டும். இந்தியா முழுக்க சென்சாரின் நடவடிக்கை தொடர்பாக ஏராளமான விமர்சனங்களை செய்ய முடியும்.

யூட்யூப் மூலமாக அன் கட் பராசக்தி படத்தை கொண்டு செல்ல முடியும். ரீல்ஸ், ஷார்ட்ஸ் மூலமாக எளிதாக வீடியோக்களை வெளியிட முடியும். இன்றைய யுகத்தில் யாராலும் எதையும் தடுக்க முடியும். சென்சாரின் சம்பவத்தால் இளம் தலைமுறைக்கு இன்னும் வேகமாக இந்த செய்திகள் சென்று சேரும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+