கட்சி வளர்ந்ததா சொன்னாங்க.. டாப் தலைகளே பின்வாங்கினா என்ன அர்த்தம்? பாஜக உள்ளே குமுறும் முகங்கள்?
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவின் இரண்டு டாப் தலைவர்கள் போட்டியிடாத காரணத்தால் கட்சி உள்ளே இருக்கும் மற்ற தலைவர்கள் அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக சார்பாக தமிழ்நாட்டில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான இரண்டு பேர் தேர்தலில் போட்டியில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக மாறி உள்ளது .

அதன்படி நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது திமுக எம்பி ஆ. ராசாவிற்கு ரூட் கிளியர் ஆகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் எல் முருகன் மீண்டும் தேர்வாகிறார். மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.
இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெரிதாக இல்லை. இதனால் திமுக எம்பி ஆ. ராசாவிற்கு பெரிய அளவில் இனி நீலகிரியில் போட்டி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்ணாமலை கோவை: இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். கோவை தேர்தலில் கண்டிப்பாக நிற்க மாட்டேன். எனக்கு தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார் பாஜகவின் அண்ணாமலை.
என்ன காரணம்: அண்ணாமலையின் இந்த முடிவிற்கு என்ன காரணம் இருக்கும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில்.. பெரும்பாலும்.. மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அதாவது லோக்சபா தேர்தல் நெருங்கிய நிலையில்.. மத்திய உளவுத்துறை சார்பாக மத்திய பாஜக அரசுக்கு ரிப்போர்ட் சென்று இருக்கும்.
தேர்தல் தொடர்பாக எங்கே நிற்கலாம், யார் நிற்கலாம், எங்கே நிற்க கூடாது என்று ரிப்போர்ட் சென்று இருக்கும். அந்த ரிப்போர்ட் காரணமாக தேர்தலில் நிற்க மாட்டேன் என்ற முடிவை அண்ணாமலை , எல் முருகன் எடுத்து இருக்கலாம்.
அப்செட்; லோக்சபா தேர்தலில் பாஜகவின் இரண்டு டாப் தலைவர்கள் போட்டியிடாத காரணத்தால் கட்சி உள்ளே இருக்கும் மற்ற தலைவர்கள் அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக இந்த தேர்தலில் எச். ராஜா போன்ற மற்ற மூத்த தலைவர்கள் போட்டியில்லை. வேறு சில மூத்த தலைவர்கள் ஏற்கனவே ஆளுநர் ஆகிவிட்டனர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை , எல் முருகன் ஆகியோர் கட்சி வளர்ந்துவிட்டதாக தொடர்ந்து பேசி வந்தனர். இப்படி இருக்க.. தற்போது தேர்தலில் நிற்காமல் பின்வாங்கி உள்ளனர். இதனால் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனராம். நம்மை மட்டும் களமிறக்குகிறார்களே.. பெரிய தலைகள் வந்தால் தானே தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள் என்ற எண்ணம் நிர்வாகிகள் இடையே உள்ளதாம்.
தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் பாஜக மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உறுதியாக இருக்கும் அதிமுக: அதன்படி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனியாக 3வது அணியை உருவாக்க முயன்று வருகிறது.
பாஜக உருவாக்கும் இந்த அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் ஆகியோர் வழங்கும் முக்குலத்தோர் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும்.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications