கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்.. ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம்
Recommended Video
சென்னை: கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் வாலாஜா சாலையில் தொடங்கியுள்ளது,
முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி மறைந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு திமுக சார்பில் மவுன ஊர்வலம் தொடங்கியது. அண்ணா சாலையிலிருந்து புறப்பட்ட அமைதி ஊர்வலம் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்கிறது.
இந்த ஊர்வலரத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, தூத்துக்குடி எம்பி கனிமொழி, நீலகிரி எம்பி ஆ ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த அமைதி ஊர்வலத்தில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications