அடாத மழையில் பொங்கிப் பெருகிய புழல் ஏரி.. மிதக்கும் மணலியால் மக்கள் அவதி
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக புழல் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மணலி பகுதியில் மழை நீரோடு கழிவு நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து உள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னையில் நேற்று எதிர்பாராதவிதமாக 10 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த அதிதீவிர கனமழை காரணமாக தலைநகரில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அண்ணாசாலை மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் பல இடங்களில் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் தேங்கி தாழ்வான பகுதிகளில் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.
ஆழ்வார்பேட்டை, மீனம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது மணலி, காசிமேடு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக புழல் நீர்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இரண்டு தரைப்பாலங்களை மூழ்கடித்து அதற்கு மேல் தண்ணீர் செல்லும் நிலையில், கால்வாய்களிலும் நீர்வரத்து அதிகரித்தது.

புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு
இந்நிலையில், சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக பூண்டி புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதால் புழல் ஏரியில் இருந்து 1,500 கன அடி நீர் நேற்று இரவு முதல் திறந்து விடப்பட்டு உபரி கால்வாயில் நீர் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் உபரி கால்வாய் வழியாக செல்லக்கூடிய நீரானது கழிவுநீருடன் கலந்து மக்கள் வசிக்கும் பகுதியைச் சூழ்ந்துள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதன் காரணமாக மணலி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் மழை நீருடன் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆமுல்லை வாயில் தரைப்பாலம் சடையங்குப்பம் தரைப்பாலம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு இருளர் காலனி கடப்பாக்கம் அரியலூர் செல்லக்கூடிய வழித்தடங்கள் அனைத்தும் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

வீட்டினுள் புகுந்த வெள்ளநீர்
1500 கன அடி நீர் திறப்பு காரணமாக தாழ்வான பகுதிகளில் தற்போது தண்ணீர் வீட்டினுள் புகுந்து உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் அவசரத் தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்காகவும், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அத்யாவசிய உதவிகளுக்காகவும் அரசையும், தன்னார்வலகளையும் எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசுக்கு கோரிக்கை
கடந்த மழையின்போது படகுகளை வைத்து பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைத்த நிலையில் தற்போது தரைப் பாலத்தின் மீது தண்ணீர் அதிகளவில் செல்வதால் தரைப்பாலம் வழியாக வேறு இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை மாற்று இடத்தில் தங்க வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications