மகனின் விடுதலை... முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி... பேச வார்த்தைகள் இல்லை - மகிழ்ச்சியில் அற்புதம்மாள்
31 ஆண்டுகள் வலியும் வேதனையும் சந்தித்துள்ளோம் அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.
சென்னை: மகனின் விடுதலையால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அற்புதம்மாள். 31 ஆண்டுகால சிறை தண்டனையில் இருந்து விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். வலியும் வேதனையும் பட்டிருக்கிறோம். இந்த விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். நன்றி என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் இப்போதைக்கு வார்த்தைகள் வரவில்லை என்று கூறியுள்ளார் அற்புதம்மாள்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பை அடுத்து தாய் அற்புதம்மாள், சகோதரி உள்ளிட்டோர் ஆனந்த கண்ணீரில் திளைத்துள்ளனர். தாய், சகோதரி உள்ளிட்டோர் பேரறிவாளனுக்கு இனிப்புகளை ஊட்டி நெகிழ்ச்சி அடைந்தனர்.

தீர்ப்பு குறித்து பேசிய தாயார் அற்புதம்மாள், 'பேரறிவாளன் விடுதலை: இந்த தீர்ப்பு எப்பொழுதோ கிடைத்திருக்க வேண்டும், இது கால தாமதம்தான்; ஆனால் மகிழ்ச்சி.மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை,'என்றார்.
எங்கள் குடும்பத்துக்கு இன்றுதான் மிக மகிழ்ச்சியான நாள் என்று பேரறிவாளனின் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பேரறிவாளன் தீர்ப்பை அடுத்து, அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உறவினர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள் இத்தனை ஆண்டு காலம் செய்தியாளர்களிடம் பேசாமல் தவிர்ததது ஏன் என்று கூறினார். 31 ஆண்டுகாலம் வலியோடும் வேதனையோடும் போராடியிருக்கிறோம். 31 ஆண்டுகாலம் சிறையிலேயே கழித்து விட்டார். மகனின் இளமைக்காலம் முழுவதும் சிறையில் கடந்து விட்டது.
மகனின் விடுதலைக்காக எத்தனையோ பேர் குரல் கொடுத்திருக்கிறார்கள் அனைவருக்கும் நன்றி. முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி. நன்றி என்ற வார்த்தையைத் தவிர இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார்.
தூக்கு தண்டனை கிடைத்து எமனிடம் சென்ற மகனின் உயிரை போரடி மீட்ட அற்புதம்மான் இன்றைக்கு மகன் விடுதலையானதால் மகிழ்ச்சியில் பேச வார்த்தைகள் இன்றி தவிக்கிறார். மகனின் விடுதலைக்காக கடந்த 31 ஆண்டுகாலம் நிறைய போராட்டங்களை கடந்து செய்தியாளர்களிடம் நிறைய பேசியிருக்கிறார் அற்புதம்மாள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications