மகனின் விடுதலை... முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி... பேச வார்த்தைகள் இல்லை - மகிழ்ச்சியில் அற்புதம்மாள்
31 ஆண்டுகள் வலியும் வேதனையும் சந்தித்துள்ளோம் அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.
சென்னை: மகனின் விடுதலையால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அற்புதம்மாள். 31 ஆண்டுகால சிறை தண்டனையில் இருந்து விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். வலியும் வேதனையும் பட்டிருக்கிறோம். இந்த விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். நன்றி என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் இப்போதைக்கு வார்த்தைகள் வரவில்லை என்று கூறியுள்ளார் அற்புதம்மாள்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பை அடுத்து தாய் அற்புதம்மாள், சகோதரி உள்ளிட்டோர் ஆனந்த கண்ணீரில் திளைத்துள்ளனர். தாய், சகோதரி உள்ளிட்டோர் பேரறிவாளனுக்கு இனிப்புகளை ஊட்டி நெகிழ்ச்சி அடைந்தனர்.

தீர்ப்பு குறித்து பேசிய தாயார் அற்புதம்மாள், 'பேரறிவாளன் விடுதலை: இந்த தீர்ப்பு எப்பொழுதோ கிடைத்திருக்க வேண்டும், இது கால தாமதம்தான்; ஆனால் மகிழ்ச்சி.மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை,'என்றார்.
எங்கள் குடும்பத்துக்கு இன்றுதான் மிக மகிழ்ச்சியான நாள் என்று பேரறிவாளனின் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பேரறிவாளன் தீர்ப்பை அடுத்து, அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உறவினர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள் இத்தனை ஆண்டு காலம் செய்தியாளர்களிடம் பேசாமல் தவிர்ததது ஏன் என்று கூறினார். 31 ஆண்டுகாலம் வலியோடும் வேதனையோடும் போராடியிருக்கிறோம். 31 ஆண்டுகாலம் சிறையிலேயே கழித்து விட்டார். மகனின் இளமைக்காலம் முழுவதும் சிறையில் கடந்து விட்டது.
மகனின் விடுதலைக்காக எத்தனையோ பேர் குரல் கொடுத்திருக்கிறார்கள் அனைவருக்கும் நன்றி. முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி. நன்றி என்ற வார்த்தையைத் தவிர இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார்.
தூக்கு தண்டனை கிடைத்து எமனிடம் சென்ற மகனின் உயிரை போரடி மீட்ட அற்புதம்மான் இன்றைக்கு மகன் விடுதலையானதால் மகிழ்ச்சியில் பேச வார்த்தைகள் இன்றி தவிக்கிறார். மகனின் விடுதலைக்காக கடந்த 31 ஆண்டுகாலம் நிறைய போராட்டங்களை கடந்து செய்தியாளர்களிடம் நிறைய பேசியிருக்கிறார் அற்புதம்மாள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications