பாலியல் வன்முறைக்கு நிரந்தர தீர்வு... சட்டங்கள் கடுமையாக வேண்டும் - விஜயகாந்த்
பள்ளி மாணவிகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் கண்டனத்துக்கு உரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்முறைகள் கண்டனத்துக்கு உரியது என்று கூறியுள்ள விஜயகாந்த், இதற்கு நிரந்தர தீர்வு காண சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொந்தரவினால் கோவையில் பிளஸ் 2 படித்து வந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த சோகம் மறைவதற்குள் கரூரில் இன்று ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் வடு இன்னும் ஆறாத நிலையில் கரூரில் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

பயமாக இருக்கு
அந்த மாணவி மரணத்திற்கு முன்பாக பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும். என்னை யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழ்வதற்கு ஆசைப்பட்டேன். ஆனா இப்போது பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பண்ண ஆசை. ஆனா முடியவில்லை என்று உருக்கமாக எழுதியிருப்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

பெற்றோர்கள் துணை வேண்டும்
தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் கடும் கண்டனத்திற்கு உரியது. மாணவிகள் தற்கொலை முடிவு எடுக்காமல் இதற்கு யார் காரணமோ அவர்களை எதிர்க்கும் தைரியத்தை வரவழைத்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

தொடரும் வன்கொடுமை
மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் கடும் தண்டனை வழங்க வேண்டும். மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல திண்டுக்கல்லில் செவிலியர் கல்லூரி பாலியல் வன்கொடுமையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

நிரந்தர தீர்வு
பெண்கள் எவ்வித அச்சமும் இன்றி நள்ளிரவில் என்றைக்கு தனியாக நடந்து செல்கிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான சுதந்திரம் பெற்றது என்ற காந்தியடிகளின் கூற்றுப்படி பார்த்தால், இந்நாடு இன்னமும் சுதந்திரம் பெறவில்லை என்றே கருதவேண்டும். இதுபோன்ற பாலியல் வன்முறைகள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடுமையான சட்டத்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications