PF திட்டத்தில் புதிய வசதி.. கணக்கு இன்னும் பதிவு செய்யலை? EPFO தந்த 6 மாத அபராதமில்லா சூப்பர் சான்ஸ்
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எனப்படும் EPFO ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம், சந்தாதாரர்கள் பதிவு செய்து கொள்வதற்கான சூப்பர் திட்டத்தை நிறுவனம் துவங்கியிருக்கிறது.. இத்திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், எந்தவித சிரமமுமின்றி எளிதாக தங்களது தொழிலாளர்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
இதுவரை PF கணக்கில் பதிவு செய்யப்படாமல் இருந்த தகுதியுள்ள ஊழியர்களை, நிறுவனங்கள் இப்போது பதிவு செய்யலாம். இதற்காக அரசு 6 மாத சிறப்பு கால அவகாசமும் கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தினால், நிறுவனங்களுக்கு பெரிய அபராதம் அல்லது சட்ட பிரச்சனை எதுவும் வராது.

இந்த சிறப்பு பதிவு காலம் நவம்பர் 2025 முதல் 6 மாதங்கள் இருக்கும். இந்த காலத்தில், 2017 ஜூலை 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை வேலை செய்தும் PF-ல் சேர்க்கப்படாத ஊழியர்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது... இதற்கு முன்பு தவறு நடந்திருந்தாலும், அதற்காக இப்போது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்காது என்பதும் தெளிவாக தெரிவித்துள்ளது.
PF தொகை - சேமிப்பு பணம்
இந்த திட்டத்தின் நோக்கம், PF இல்லாமல் இருந்த ஊழியர்களுக்கு எதிர்கால பாதுகாப்பு வழங்குவதுதான். PF என்பது வேலை செய்யும் காலத்தில் சேமிக்கப்படும் பணமாகும்.. இந்த பணம், ஓய்வு பெற்ற பிறகு மிகவும் உதவியாக இருக்கும்.. ஆனால் பல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் PF இல்லாமல் இருந்தனர். இப்போது அந்த குறையை சரி செய்ய இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கு பெரிய சலுகை வழங்கப்பட்டுள்ளது. முன்பு ஊழியர்களின் PF தொகையை பிடிக்காமல் இருந்திருந்தாலும், இப்போது நிறுவனங்கள் தங்களின் பங்கு PF தொகையை மட்டும் செலுத்தினால் போதும்.
பலன்கள், பயன்கள், நன்மைகள் ஏராளம்
அதனுடன் குறைந்த வட்டி, அலுவலக செலவு, அதிகபட்சம் ரூ.100 மட்டும் அபராதமாக செலுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் எதுவும் இல்லை. இதனால் நிறுவனங்கள் எந்த பயமுமில்லாமல் ஊழியர்களை பதிவு செய்ய முடியும்.
இந்த பதிவு செய்யப்பட்டதும், ஊழியர்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்... குறிப்பாக PF கணக்கு தொடங்கப்படும். எதிர்காலத்திற்கு சேமிப்பு உருவாகும்.. குறிப்பிட்ட காலம் PF-ல் பணம் செலுத்திய பிறகு, பென்ஷன் பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.... வேலை செய்யும் போது மரணம் ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு காப்பீட்டு உதவியும் வழங்கப்படும். இதுவரை இந்த பாதுகாப்புகள் கிடைக்காமல் இருந்த பலருக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.
மிஸ் செய்யக்கூடாது
இந்த திட்டம் ஒப்பந்த ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன் தரும்... இவர்களையும் PF திட்டத்தின் கீழ் கொண்டு வர EPFO அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் தகவல் பரப்பும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மொத்தத்தில், இந்த 6 மாத PF பதிவு வாய்ப்பு, ஊழியர்களுக்கு எதிர்கால நிம்மதியை தரும் ஒரு சூப்பர் திட்டமாகும். நிறுவனங்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாமல் விடாமல் பயன்படுத்தினால், பல ஆயிரம் ஊழியர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும்..!!!












Click it and Unblock the Notifications