Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டினப்பிரவேசம்.. இந்த வருஷம் ஓகே.. ஆனால் அடுத்த வருஷம்.. சூசகமாக செக் வைக்கும் அமைச்சர் சேகர் பாபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டினப்பிரவேசம் இந்த ஆண்டு ஏற்படும் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது வரும் காலங்களில் இதை தவிர்த்து மாற்று ஏற்பாடுகளை செய்யக்கோரி இந்து சமய அறநிலைத்துறை வேண்டுகோள் விடுத்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    #BREAKING தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கான தடை நீக்கம்!

    பட்டணப் பிரவேசத்தில் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. விசிக, திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் எதிர்த்தனர்.

    பாஜக அதிமுக

    பாஜக அதிமுக

    பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த முடிவை எதிர்த்தன. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தருமபுர ஆதீனத்தின் கோரிக்கையை ஏற்று இதற்கான தடையை நீக்கியது தமிழ்நாடு அரசு. இன்று தடையை திரும்ப பெறுவதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி அறிவித்தார். வரும் 22ம் தேதி பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ளது.

    பட்டினப்பிரவேசம்

    பட்டினப்பிரவேசம்

    இந்த நிலையில், முதல்வர் சந்திப்புக்கு பின்பு பட்டினப்பிரவேசம் இந்த ஆண்டு ஏற்படும் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது வரும் காலங்களில் இதை தவிர்த்து மாற்று ஏற்பாடுகளை செய்யக்கோரி இந்து சமய அறநிலைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது என்றும் இது தொடர்பாக ஆதீனங்கள் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார்.

    பேட்டி

    பேட்டி

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தாயைம்பட்டு கிராமத்தில் விஷ்ணு துர்க்கை மற்றும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது. யாகசாலையில் கலசங்கள் வைக்கப்பட்டு வேதமந்திரங்கள் ஓதி யாக குண்டங்கள் வளர்க்கப்பட்டன. இதன் முடிவில் பூர்ணாகுதி நடைபெற்று யாக கலசங்கள் கோவிலின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கும்பாபிஷேக நீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டார்.. பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,,

     சேகர் பாபு

    சேகர் பாபு

    பட்டினபிரவேசத்திற்கு தமிழக முதல்வர் நேற்று முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆண்டாண்டு காலமாக நடைபெற்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து கால மாற்றத்திற்கு ஏற்ப பல நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்றைக்கு தருமபுர ஆதீனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர்கள் தமிழக முதல்வரை சந்தித்த நிலையில் அதற்குண்டான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

    மாற்று ஏற்பாடு

    மாற்று ஏற்பாடு

    மேலும் வரும் ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மாற்றாக வேறு ஒரு ஏற்பாடுகளை செய்யும்படி இந்து சமய அறநிலைத்துறை ஆணையம் சார்பாக ஆதீனத்திடம் வேண்டுகோள் வைக்கப் பட்டுள்ளது. அதற்கு இந்த ஆண்டு ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் இந்த நிகழ்வு முடிந்த பின்பு ஆதினங்கள் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறியுள்ளனர். நேற்று ஆதினங்கள் முதல்வரை சந்தித்ததால் பட்டினப் பிரவேசம் நடைபெறும் சூழல் நல்ல சூழல் ஏற்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். இதை தொடர்ந்தே பட்டணப் பிரவேசத்தில் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+