ரஷ்யாவில் சென்னை டாக்டருக்கு சித்ரவதை.. உணவு இன்றி தாக்கும் அதிகாரிகள்.. மீட்டுதர கெஞ்சும் மனைவி
சென்னை: சென்னையில் வசித்து வரும் ஜெகதீஷ்வரன் உக்ரைனில் மருத்துவம் படித்தார். போர் காரணமாக அவர் ஊர் திரும்பினார். அதன்பிறகு ரஷ்யா சென்ற அவரை அங்குள்ள அதிகாரிகள் கைது செய்து அடித்து உதைத்து, உணவு, தண்ணீர் கொடுக்காமல் துன்புறுத்தி வருகின்றனர். ரஷ்ய மொழி தெரியும் என்பதால் போர் புரிய வேண்டும். இல்லாவிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று மிரட்டுகின்றனர். எப்படியாவது எனது கணவரை காப்பாற்றி தாருங்கள் என்று பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது மனைவி யாமினி கெஞ்சியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்வரன். டாக்டர். இவர் உக்ரைனில் மருத்துவ மேல் படிப்பை படித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது.

அப்போது ஜெகதீஷ்வரன் நாடு திரும்பினார். இந்த சமயத்தில் ஜெகதீஸ்வரனுக்கு திருமணம் நடந்தது. யாமினி என்ற பெண்ணை கரம்பிடித்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெகதீஷ்வரன் தனது நண்பர் சேகருடன் ரஷ்யாவுக்கு சென்றார். ரஷ்யாவின் சோச்சி விமான நிலையத்தில் அவர்கள் இறங்கினார். அப்போது ரஷ்ய அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். ஜெகதீஷ்வரன் உக்ரைனில் படித்த விஷயத்தை அறிந்து இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இதில் சேகர் 10 நாளில் விடுவிக்கப்பட்டார். ஆனால் ஜெகதீஸ்வரர்ன 43 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இருவரும் நாடு திரும்ப முயன்றனர். அப்போது மீண்டும் ஜெகதீஷ்வரனை விமான நிலையத்தில் வைத்து அதே அதிகாரிகள் கைது செய்தனர்.
தற்போது ஜெகதீஷ்வரன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவரை மீட்க மனைவி யாமினி முயன்று வருகிறார். ஆனால் இதுவரை பலன் அளிக்கவில்லை. இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம், தலைமை செயலகம், மத்திய வெளியுறவுத்துறைக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகமும் சரியான பதில் சொல்லவில்லை என்று மனைவி யாமினி கூறியுள்ளார். இதனால் ஜெகதீஷ்வரனின் மனைவி யாமினி மற்றும் குடும்பத்தினர் கலங்கிப்போய் உள்ளனர்.
இதுபற்றி யாமினி கூறுகையில்,‛‛எனது கணவரை ரஷ்யா அதிகாரிகள் துன்புறுத்தி வருகின்றனர். அவரை அடித்து தாக்குகின்றனர். உணவு, தண்ணீர் கொடுக்க மறுக்கின்றனர். எனது கணவருக்கு ரஷ்ய மொழி தெரியும். இதனால் ரஷ்ய ராணுவத்தில் இணைந்து உக்ரைன் மீது போர் புரிய வலியுறுத்துகின்றனர். ராணுவத்தில் சேர வேண்டும். இல்லாவிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர். உணவு, தண்ணீர் கொடுக்காதாதல் அவரது சுகர் அளவு மோசமாக குறைந்தது. கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
மீண்டும் அவரை கைது செய்வதாக கூறுகின்றனர். நான் பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முதல்வர் ஸ்டாலினிடம் கெஞ்சி கேட்கிறேன். எப்படியாவது என் கணவரை மீட்டு தாருங்கள்'' என கோரிக்கை வைத்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications