தமிழகத்தில் மே 3ல் நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31க்கு மாற்றம்
மே 2ஆம் தேதி பொதுத்தேர்வு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் தேர்வு மே 31ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிற தேர்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட அட்டவணையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் 9 ,10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் 11ஆம் வகுப்பு எஞ்சியிருந்த பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. ஜனவரி மாதம் முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. பிப்ரவரி மாதத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் அவர்களுக்கு திறனறிவு தேர்வை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் மே 3ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. செய்முறை தேர்வுகள் 16ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Recommended Video


இந்த நிலையில் மே 2ஆம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பிளஸ் 2 தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்வு மே 31ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் அனைத்தும் முன்னர் அறிவித்த தேதிகளிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அம்மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம்












Click it and Unblock the Notifications