+2 பொதுத்தேர்வில் கால்குலேட்டர் எடுத்து செல்ல அனுமதி.. வந்த அசத்தல் அறிவிப்பு! எந்த தேர்வுக்கு அனுமதி தெரியுமா
சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அறிவித்தார். அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறுகிறது. இதற்கிடையே இந்த முறை +2 மாணவர்கள் தேர்வுக்கு கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு நடைபெறும். அதன்படி இந்த கல்வியாண்டில் 10 மற்றும் +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். பாட வாரியாக அட்டவணை, செய்முறைத் தேர்வு தேதிகள் மற்றும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள தேதி ஆகியவை அறிவிக்கப்பட்டன.

கால்குலேட்டர்
அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். +2 பொதுத்தேர்வில் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வந்த நிலையில், அதை ஏற்று கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
யாருக்கு அனுமதி?
அதாவது 12ம் வகுப்பில் சயின்ஸ் இல்லாத பிரிவைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அக்கவுண்ட்ஸ் எனப்படும் கணக்கு பதிவியல் பாடம் இருக்கிறது. இந்தத் தேர்வு எழுதுவோர் இத்தனை காலம் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி கிடையாது. இருப்பினும், அதற்கு அனுமதி தர வேண்டும் எனச் சொல்லி பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்றே கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுதும் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டரை தேர்வுக்கு எடுத்துச் செல்லலாம். அதைப் பயன்படுத்தித் தேர்வுகளை எழுதலாம். நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது அக்கவுண்ட்ஸ் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.
பொது தேர்வு தேதிகள்
இந்தாண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 16ம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி ஆரம்பித்து மார்ச் 26ஆம் வரை நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். மாநிலம் முழுக்க 8.07 லட்சம் மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகிறார்கள்.
10ம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்குப் பிப்ரவரி 9 முதல் 16ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து மார்ச் 11 முதல் தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. அதேபோல 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8.70 லட்சம் மாணவ மாணவிகள் எழுதவுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள்
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் கணினி வழியில் தேர்வெழுதக் கடந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடந்தாண்டு இந்த முறையில் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதையடுத்து இவ்வாண்டும் அதே முறையில் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுத வசதியாகக் கூடுதலாக ஒரு மணி நேரம் காலவகாசம் வழங்கப்பட உள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications