25 வருஷம் ஆச்சு.. மீண்டும் "இன்டர்போல்" மாநாடு.. டெல்லியில் இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
டெல்லியில் இன்று நடக்கும் இன்டர்போல் மாநாட்டில் பிரதமர் மோடி உரைநிகழ்த்துகிறார்
சென்னை: இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தை பிரதமர் மோடி இன்றுதொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.. இந்த கூட்டம் டெல்லியில் இன்று துவங்கி நடக்க உள்ளது.
சர்வதேச அளவில் போலீஸ் துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் இன்டர்போல் அமைப்பு. ஐரோப்பிய நாடான பிரான்சின் லியான் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பில் மொத்தம் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் பொது சபை கூட்டம்தான் இன்று நடக்க போகிறது.. டெல்லியில் இன்று அதாவது 18ம் தேதி துவங்கி, வருகிற 21ம் தேதி வரை கூட்டம் நடக்க உள்ளது.. இந்தியாவில் 25 வருடங்களுக்கு பிறகு, இந்தக் கூட்டம் நடக்க உள்ளது என்பதுதான் இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டு வருகிறது.. இதற்கு முன்பு, 1997ல் கடைசியாக இந்த கூட்டம் நடந்தது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இந்தக் கூட்டம் டெல்லியில் நடத்தப்பட உள்ளது... பிரகதி மைதான், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் ஆகிய இடங்களில் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.. இதை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 195 நாடுகளின் மத்திய போலீஸ் அமைப்பின் தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட கிட்டத்தட்ட 2,000 பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம் நாட்டின் சார்பில் இந்த அமைப்பில்தான் சிபிஐ இடம்பெற்றிருக்கிறது என்பதால், இந்த இன்டர்போல் பொது சபை கூட்டத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிபிஐதான் கவனித்து கொண்டு வருகிறது.. இந்த சிறப்புவாய்ந்த இன்டர் போல் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மத்திய போலீஸ் அமைப்பைச் சேர்ந்த குழுவினர் பங்கேற்க வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் சார்பில் உள்துறை அமைச்சர், சிபிஐ இயக்குனர் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.. 25 வருடங்களுக்கு பிறகு நடக்கும் மாநாடு என்பதாலும், 195 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதாலும், உலக நாடுகளின் கவனத்தையும் இந்தத மாநாடு ஈர்த்து வருகிறது.
-
கரூர் வழக்கு.. டெல்லிக்கு கூப்பிடும் சிபிஐ! விஜய் ஆஜராவது சந்தேகம்தான் -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ஏடிஎம் திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
Senthil Balaji: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்? -
சிபிஐ சம்மனை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த விஜய்.. அதிரடி முடிவால் ஷாக்கான டெல்லி -
நகைகள் கிடைக்கவில்லை.. அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ! -
சுற்றுலா போன பெண்ணை நைனிடால் காட்டுக்குள் விடிய விடிய துரத்திய டாக்ஸி டிரைவர்! ஜிபிஎஸ் காட்டிய உண்மை -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்











Click it and Unblock the Notifications