அமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகம்.. பிரதமர் மோடி
Recommended Video
சென்னை: அமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகமாக வருகின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை வந்தார். அப்போது அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பாஜக சார்பிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூடியிருந்த பாஜக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசுகையில் சென்னைக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள என்னை வரவேற்க இவ்வளவு பேர் வந்துள்ளீர்கள். அமெரிக்காவில் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழ் மொழி பழமையான மொழி என அமெரிக்காவில் கூறினேன்.
அமெரிக்க ஊடகங்களில் தமிழ் குறித்து அதிக செய்திகள் வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டையே நிறுத்துங்கள் என கூறவில்லை. ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இந்தியா பற்றி அமெரிக்காவில் எதிர்பார்ப்புள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications