அமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகம்.. பிரதமர் மோடி
Recommended Video
சென்னை: அமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகமாக வருகின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை வந்தார். அப்போது அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பாஜக சார்பிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூடியிருந்த பாஜக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசுகையில் சென்னைக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள என்னை வரவேற்க இவ்வளவு பேர் வந்துள்ளீர்கள். அமெரிக்காவில் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழ் மொழி பழமையான மொழி என அமெரிக்காவில் கூறினேன்.
அமெரிக்க ஊடகங்களில் தமிழ் குறித்து அதிக செய்திகள் வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டையே நிறுத்துங்கள் என கூறவில்லை. ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இந்தியா பற்றி அமெரிக்காவில் எதிர்பார்ப்புள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மோடி.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications