மக்களை தேடி மருத்துவம் மாடலில்.. தேசிய அளவில் வருகிறது பிஎம் ஸ்பெஷல் திட்டம்! 1 லட்சம் பேருக்கு வேலை
சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை போலவே தேசிய அளவில் வீடு தேடி மருத்துவம் மற்றும் சேவை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்திற்கு பிஎம் ஸ்பெஷல் என்று பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்று திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வந்தது.
பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று மருந்து சேவைகள் வழங்கும் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பொதுவான நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

மருத்துவம்
சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு மருந்து வழங்குதல் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நேரடியாக வீட்டிற்கே சென்று நோயாளிகளை கண்காணிப்பது, அவர்களுக்கு தவறாமல் இலவச மருந்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

பிஎம் ஸ்பெஷல்
இந்த நிலையில்தான் இதே போன்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. "பிஎம் ஸ்பெஷல் - 'PM Special" என்ற பெயரில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனியர் சிட்டிசன்களுக்கு மருத்துவ சேவையை வீட்டிலேயே வழங்கும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. நேரடியாக வீட்டிற்கே சென்று குறைந்த விலையில் மருத்துவ சிகிச்சை வழங்கும் விதமாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கேர் டேக்கர்
இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்குவார்கள். அதோடு முதியவர்களை கவனித்துக்கொள்ளும் விதமாக 1 லட்சம் பேரை கேர் டேக்கர் பணிக்கு எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட்டு அடுத்த 3 வருடங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சமூக நலத்துறை மூலம் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

எப்படி சேர்வது
இந்த பயிற்சியை பெற ஆன்லைன் மூலம் ரிஜிஸ்டிரேசன் செய்ய வேண்டும். அதற்கு விரைவில் ஆன்லைன் பக்கம் உருவாக்கப்படும். இந்த ஆன்லைன் பக்கத்திலேயே முதியோர்கள் தங்களுக்கு தேவையான கேர் டேக்கர்களை தேர்வு செய்ய முடியும். உதாரணமாக புதிதாக உருவாக்கப்பட உள்ள இணைய பக்கத்தில் ஒரு முதியவர் தனது குறைகளை, பாதிப்புகளை குறிப்பிட முடியம்.

கேர் டேக்கர் பணி
இதற்கு ஏற்ற கேர் டேக்கர்களை அந்த பக்கத்தில் பார்க்க முடியும். அதில் உங்களுக்கு பிடித்தமான நபர்களை தேர்வு செய்ய முடியும். ஆப்களில் டாக்டர்களுக்கு முன் பதிவு செய்வது போலவே பிஎம் ஸ்பெஷல் திட்டம் மூலம் கேர் டேக்கர்களை புக் செய்ய முடியும். செப்டம்பர் மாதம் இந்த இணைய பக்கம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் கேர் டேக்கராக இணைய 12ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். இதில் எஸ், எஸ்டி, ஓபிசி, பிரிவினர் 10 ஆயிரம் பேருக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
-
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்!












Click it and Unblock the Notifications