7 தமிழர் விடுதலையில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என சிபிஐ மனு- டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னிச்சையாகவே முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்திருப்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் 2 ஆண்டுகளாக தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தரவில்லை.

சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணை அறிக்கைக்கு (எம்.டி.எம்.ஏ) காத்திருப்பதாக ஆளுநர் பன்வாரில் புரோஹித் தரப்பு தெரிவித்தது. ஆளுநரின் இந்த தாமதத்துக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்தது.
மேலும் எம்.டி.எம்.ஏ. அறிக்கைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தாங்கள் நடத்தும் விசாரணைக்கும் ஆளுநர் முடிவெடுப்பதற்கும் தொடர்பு இல்லை என கூறியிருந்தது. சிபிஐ-ன் இந்த பதிலை வரவேற்று டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பேரறிவாளன் விடுதலைக்கும், எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் தொடர்பு இல்லை; விசாரணை அறிக்கையை ஆளுனருக்கு தர மாட்டோம்; ஆளுனர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியிருக்கிறது. இது மிகச்சரியான நிலைப்பாடு ஆகும்.
எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பு இல்லை என சிபிஐ கூறிவிட்ட நிலையில், சொத்தைக் காரணத்தைக் கூறி இனியும் தாமதிக்காமல் பேரறிவாளன் விடுதலை குறித்தும், மற்ற 6 தமிழர்கள் விடுதலை குறித்தும் தமிழக ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications