Seeman Vs Periyar: பெரியாரை சீமான் இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை: சமூக நீதிக்கு அடித்தளமிட்ட தந்தை பெரியாரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் இழிவுபடுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது; தந்தை பெரியார் இல்லை என்றால் என் தந்தை ராமதாஸ், நான்
மருத்துவர்களாகி இருக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் (பாமக) டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
சீமானின் பெரியார் மீதான இழிவான விமர்சனங்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் தந்த பதில்: டாக்டர் ராமதாஸ் இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு தந்தை பெரியாரை சிலர் இழிவுபடுத்துகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தந்தை பெரியார் இல்லை என்றார் ராமதாஸ் ஒரு மருத்துவராக இருந்திருக்கமாட்டார்.. நான் ஒரு மருத்துவராக இருந்திருக்கமாட்டேன்.. நமக்கு சமூக நீதியைப் பெற்றுக் கொடுத்தது தந்தை பெரியார்தான்.

இந்தியாவுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது யார் என்று சொன்னால் மகாத்மா காந்தி என்று சொல்கிறோம். மகாத்மா காந்தி அவரது சுய சரித்திரம் எழுதி இருக்கிறார். அதிலே சில செய்திகள் இருந்திருக்கலாம்.. அதனால் மகாத்மா காந்தியை பற்றி யாராவது இழிவாக பேச முடியுமா? மகாத்மா காந்தி என்றால் நம்முடைய தேசத்தந்தை.. அவ்வளவுதான்..
அதேபோல தந்தை பெரியார் அவர்கள் நமக்கு சமூக நீதியைப் பெற்றுக் கொடுத்தார். பெரியாரிடத்திலேயும் குறைகள் இருக்கலாம்.. அதற்காக அந்த குறைகளையே பேசுவது தவறு. எல்லோருக்கும் சின்ன சின்ன குறைகள் இருக்கும். ஆனால் சமூக நீதி என்ற
அடித்தளம் தந்தை பெரியார் போட்டுக் கொடுத்தது. தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இன்று பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற சூழலில்தான் இருந்திருக்கும். இன்றைக்கு சீமான் போன்றவர்கள் பெரியார் அப்படி செய்தார்.. இப்படி செய்தார் என பேசுவது எல்லாம் தேவை இல்லாதது. பெரியாரை கருத்தியல் ரீதியாக, அரசியல் ரீதியாக பேசுவது வேறு.. தனிநபர் விமர்சனங்களை எல்லாம் வைக்கக் கூடாது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏற்கனவே பெரியார் குறித்த இழிவான சீமானின் விமர்சனங்களுக்கு மிக கடுமையாக பெரியார் தொண்டர்கள் எதிர்வினையாற்றும் நிலையில் பாமக பதிலடி தந்துள்ளது.












Click it and Unblock the Notifications