Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடிகாரன்னு சொல்லாதீங்க.. எனக்கு கோவம் வரும்! கொந்தளித்த அமைச்சர் முத்துசாமிக்கு அன்புமணி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி சமூகநீதி பேச வேண்டும் என்றும் குடிநீதி பேசக் கூடாது எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை காலையிலேயே திறப்பது பற்றி கோரிக்கை வந்து கொண்டு இருப்பதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு அப்போதே பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று கோவை செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து அமைச்சர் முத்துசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

PMK President Anbumani Ramadass condemned Minister Muthusamy on drunken people

இதற்கு பதிலளித்த அவர், "காலையில் மது அருந்துபவர்களை குடிகாரர்கள் என சொல்லாதீர்கள். எனக்குக் கோவம் வந்துவிடும். குடிப்பவர்களை விமர்சிப்பதற்கு பதிலாக ஆலோசனைக் கூறுங்கள். காலையில் கடும் பணிக்கு செல்பவர்கள் குடிக்கும் போது குடிகாரர்கள் என விமர்சிக்காதீர்கள்.

ஜாலிக்காக குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதில் தவறு இல்லை. காலையில் தூய்மை பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் நாற்றத்தை பொறுத்துக்கொள்ள மது அருந்துகிறார்கள். எனவே அவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது." என்றார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "காலையில் சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு செல்பவர்கள் நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது; அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார்.

இதையெல்லாம் எந்த வகை தத்துவத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை. சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பது உண்மை தான். அதற்கான தீர்வு சாக்கடைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை எந்திரமயமாக்கி, அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அடுத்தடுத்த நிலையில் உள்ள பணிகளுக்கு உயர்த்துவது தான் சமூக நீதி!

மாறாக, சாக்கடை தூய்மை செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு காலையிலேயே மது கொடுக்க வேண்டும் என்று துடிப்பது மது நீதி. அது மிகவும் ஆபத்தானது. நாற்றத்தை மறக்க மது தான் தீர்வு என்றால், அதை விட கொடிய நாற்றத்துடன் மதுவை அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்?" என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+