சிறுத்தைபோல் நடந்து சென்றாய்.. நீ வடக்கிலே கிழக்கு.. வைகோவுக்கு வைரமுத்து உணர்ச்சிகர வாழ்த்து
சென்னை: நீ வடக்கிலே கிழக்கு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு, கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக மற்றும் திமுக எம்பிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். திமுக சார்பில் தேர்வான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் சண்முகம் மற்றும் வில்சன், அதிமுக சார்பில் சந்திரசேகர் மற்றும் மொகமது ஜான் ஆகியோரும் பதவியேற்றனர்.
அனைவருமே தமிழில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது சிறப்பு.
இதனிடையே, வைகோவிற்கு, கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதை பாருங்கள்: வாழ்த்துக்கள் வைகோ...
வாழ்த்துக்கள் வைகோ...
— வைரமுத்து (@vairamuthu) July 25, 2019
சிறுத்தைபோல் நடந்து சென்றாய்
செம்மொழி உறுதி பூண்டாய்
நிறுத்தவே முடியவில்லை
நீள்விழி வடித்த கண்ணீர்
போர்த்திறம் பழக்கு – விட்டுப்
போகட்டும் வழக்கு – உன்
வார்த்தைகள் முழக்கு – நீ
வடக்கிலே கிழக்கு@mdmkiw #Vaiko #mdmk #மதிமுக
சிறுத்தைபோல் நடந்து சென்றாய், செம்மொழி உறுதி பூண்டாய், நிறுத்தவே முடியவில்லை, நீள்விழி வடித்த கண்ணீர்
Delhi: MDMK leader Vaiko takes oath as member of Rajya Sabha. pic.twitter.com/WZtkHcKPEJ
— ANI (@ANI) July 25, 2019
போர்த்திறம் பழக்கு - விட்டுப் போகட்டும் வழக்கு - உன் வார்த்தைகள் முழக்கு - நீ வடக்கிலே கிழக்கு.
இவ்வாறு வைரமுத்து உக்கிரமான தமிழ்ச் சொற்களால் வரிகளை அமைத்து வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.