14 வயது மகளை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த தந்தை.. மனைவி உடந்தை.. சென்னையில் கொடுமையான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெற்ற தந்தையே மகளை பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இதற்கு அந்த நபரின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

Recommended Video

    பெற்றமகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை,சித்திபோக்சோ சட்டத்தில் கைது

    சென்னை திருவொற்றியூர் மகளிர் அனைத்து காவல் நிலையத்தில் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் அடிப்படையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் அதற்கு உதவியாக இருந்த இரண்டாவது மனைவியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    எப்படி இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது தெரியுமா?

    மெரினா கடற்கரை

    மெரினா கடற்கரை

    சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் சோகமாக அமர்ந்து இருந்துள்ளார் 14 வயது சிறுமி. அவரை பார்த்த காவல்துறையினர் அந்த சிறுமியிடம் விசாரித்தனர் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் வெறித்து பார்த்தபடி இருந்துள்ளார். எனவே மெரினா காவல்துறையினர் புதுவண்ணாரப்பேட்டையில் இருக்கக்கூடிய காப்பகத்தில் சிறுமியை ஒப்படைத்தனர். காப்பகத்தில் உள்ளவர்கள் சிறுமிக்கு உணவு கொடுத்தனர். ஆனால் அந்த சிறுமி எதுவும் சாப்பிடாமல் சோகத்தில் இருந்தார்.

    இரண்டாவது திருமணம்

    இரண்டாவது திருமணம்

    இந்த நிலையில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தை சோ்ந்த குமாா் (வயது 40) என்பவருடைய மகள் இவர் எனத் தெரியவந்தது. குமார் மனைவி உயிரிழந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டாவதாக கஸ்தூரி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

    ஒரு மாதமாக பலாத்காரம்

    ஒரு மாதமாக பலாத்காரம்

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தந்தை குமாரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இதற்கு, இரண்டாவது மனைவி கஸ்தூரி உதவி செய்த அசிங்கம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் தகவல் தெரிவிக்கபட்டு திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் விரைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    போக்ஸோ சட்டம்

    போக்ஸோ சட்டம்

    விசாரணையில், சிறுமிக்கு அவரது தந்தை குமாா் குளிா்பானத்தில் மதுவை ஊற்றிகொடுத்து பலமுறை உடலுறவு கொண்டு துன்புறுத்தியதும் அதனை யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்த கஸ்தூாி ஆகிய இருவா் மீதும் போக்ஸோ சட்டம் மற்றும் மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளியுள்ளது போலீஸ்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+