Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேட்டில் தடையை மீறி அமைதி பேரணி நடத்திய தேமுதிகவினர்.. விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா மரியாதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அக்கட்சி சார்பில் இன்று அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தேமுதிக திட்டமிட்டது. இந்த பேரணிக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும் அமைதி பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி தேமுதிகவினர் பேரணியை தொடங்கினர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் எல் கே சுதீஷ், விஜயபிரபாகரன், தொண்டர்கள் கருப்பு உடை அணிந்து பேரணியாக சென்று கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

vijayakant

நடிகரும் தேமுதிக தலைவருமாக இருந்த மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்தது. இதில் பங்கேற்க முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , தவெக தலைவர் விஜய் என அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேமுதிக சார்பாக நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

காவல்துறை அனுமதி மறுப்பு

அதேபோல விஜயகாந்த நினைவு தினமான இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த தலைமையில் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் தேமுதிகவின் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அமைதிப்பேரணி நடத்த அனுமதி கோரி போலீசாருடன் தேமுதிகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரத்தில் அனுமதி வழங்க கோரி தேமுதிகவினர் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பது உள்ளிட்ட பல காரணத்தால் தேமுதிகவினரின் அமைதிப்பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

தடையை மீறி பேரணி

இந்த நிலையில் காவல்துறையின் தடையை மீறி தேமுதிகவினர் அமைதிப்பேரணியை தொடங்கினர். சுமார் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேடு சாலையில் பேரணியாக சென்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் எல் கே சுதீஷ், விஜயபிரபாகரன், தொண்டர்கள் கருப்பு உடை அணிந்து பேரணி சென்றனர். பேரணியாக தேமுதிக தலைமை அலுவலகத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் விஜயகாந்த் சிலையில் ஒரு நிமிடம் சாய்ந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

vijayakant

முன்னதாக விஜயகாந்தின் நினைவுதினத்தையொட்டி, அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பது என்பது, அரசியல் காழ்ப்புணர்ச்சியா இல்லை போலீசாரின் காழ்ப்புணர்ச்சியா என்று தெரியவில்லை என தேமுதிகவின் துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்தார். மேலும் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி நடத்த அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். எனினும் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர்.

தேமுதிகவினர் சாலை மறியல்

இதனால் தேமுதிக தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு கோயம்பேடு சாலையில் அமர்ந்து தேமுதிக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தான் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் அமைதி பேரணியை தொடங்கியுள்ளனர். விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணியாக செல்கின்றனர்.

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 5 ஆம் தேதி அன்றே காவல்துறையினரிடம் அமைதிப் பேரணிக்கு அனுமதி கேட்டதாகவும், ஆனால் நேற்று மாலை தான் போலீசார் அனுமதி தர மறுத்து இருப்பதாக தேமுதிகவினர் கூறினர். வேண்டும் என்றே கடைசி நேரத்தில் தெரிவித்தனர் என்றும் கூறினர்.

vijayakant

அரசியல் தலைவர்கள் மரியாதை

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பாட்டாளி மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் விஜயகாந்த் என்றும், புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளரவிட்டவர் என்றும் சீமான் பேசினார்.

அமைச்சர் சேகர்பாபு விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில் பேரணி தொடர்பாக பேசி பேசி பிரச்சினையை வளரவிட வேண்டாம் என்று கூறினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெய்க்குமாரும் அதிமுக சார்பில் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+