மீம் வீடியோ போட்டு காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்.. காவல் ஆணையர் அதிரடி
சென்னை : காவல்துறை மானிய கோரிக்கை அறிவிப்பை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மானியக் கோரிக்கையை விமர்சித்து ஃபேஸ்புக்கில் மீம் வீடியோ பதிவிட்ட தேனாம்பேட்டை தலைமை காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2 நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கையில் பதிலுரையாற்றி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், பல்வீர்சிங் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிச் சூடு இல்லை, இதன் அடையாளமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் இங்கே வருகின்றன எனத் தெரிவித்தார்.
மேலும், 101 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 4,500 ரூபாய் சீருடைப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகரில் 2,000 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும். ஒருங்கிணைந்த வாகன சோதனை மையங்களில் சென்னை மாநகர காவல்துறைக்காக நவீன உபகரணங்கள் வாங்கப்படும்.
குற்றவாளிகளை கைது செய்ய 25 ரிமோட் மூலம் விலங்கிடும் கருவிகள் வாங்கப்படும். க்ரிப்டோ கரன்சி மோசடியை கண்டிபிடிக்க செயின் பகுப்பாய்வு ரீயாக்டர் கருவி வாங்கப்படும். அனைத்து தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில் காவல்துறை மானிய கோரிக்கை அறிவிப்பை விமர்சித்து ஃபேஸ்புக்கில் வீடியோ மீம் பதிவிட்ட தேனாம்பேட்டை தலைமைக் காவலர் பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications