ரூட் தல மோதலில் ஈடுபட்ட மாணவர் கைகள் திடீரென உடைந்தது எப்படி? போலீசுக்கு திமுக சரவணன் சரமாரி கேள்வி
Recommended Video
சென்னை: சென்னையில் குறிப்பிட்ட பஸ், ரயில் ரூட்களில் யார் தலைவராக இருப்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் நடு ரோட்டில் வீச்சரிவாளை வைத்து வெட்டி தாக்குதல் நடத்திய மாணவர்கள் கை உடைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
ரூட் தலையாக யார் இருப்பது என்பது தொடர்பாக, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புது கல்லூரி மற்றும் நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது வழக்கம்.
இதேபோல சம்பவத்தன்று மதியம் கல்லூரி முடிந்ததும், திருவேற்காடு செல்லும் (தடம் எண் 29 இ) மாநகர பேருந்தில் சில மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அரிவாள் வெட்டு
மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் பைக்குகளில் அரிவாளுடன் விரட்டி சென்று, அரும்பாக்கம் மெகா மார்ட் ஷோரூம் அருகே பைக்கை மறித்து, டிரைவரை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த மாணவர் கும்பல் பஸ்சில் இருந்த 7 மாணவர்களை கீழே இறங்கும்படி அரிவாளை காட்டி மிரட்டினர்.
சாலையில் இழுத்து போட்டு 7 மாணவர்களையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மக்கள் பீதியில் உறைந்து போயினர்.

சிசிடிவி காட்சிகள்
தகவலறிந்த, அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிசிடிவி காமிரா வீடியோக்களை ஆய்வு செய்து, அதில் பதிவான வாகனங்களின் பதிவெண்களை வைத்து 3ம் ஆண்டு மாணவர்கள் மதன், ஸ்ருதி, ரவீந்திரன், ராகேஷ் ஆகிய 4 மாணவர்களை கைது செய்தனர்.
|
காவல்துறை பொறுப்பு
இந்த நிலையில் போலீஸ் கைது செய்த மாணவர்கள் கைகள் முறிபட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு காவல்துறை பொறுப்பு என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை குற்றம் சாட்டியுள்ளார். "நேற்றைய அரிவாள் வெட்டு சம்பவத்தில், ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் கைகள் இன்று முறிக்கப்பட்டுள்ளது, கீழே விழுந்து கையை உடைத்து கொண்டார்கள் என்கிறது தமிழக காவல் துறை. காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கைதிகளுக்கு என்ன நடந்தாலும் காவல்துறை தான் பொறுப்பு. அப்பட்டமான மனித உரிமை மீறல்!" இவ்வாறு அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
|
கோர்ட் எதற்கு
போலீஸ் தண்டனை கொடுப்பதற்கு நீதிமன்றங்கள் தேவையில்லை, யாருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என நம் சட்டம் சொல்கிறது! எந்த சட்டம் குற்றவாளியின் கையை உடைக்க சொல்கிறது? நாளை மஞ்சள் கோட்டை தாண்டி நிறுத்தினால், போலீஸ் காலை உடைத்தால் சரிதானென்று சென்று விடலாமா?












Click it and Unblock the Notifications