ரவுடி பேபி சூர்யா மீது 4 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு.. யூடியூபரை செருப்பால் அடித்ததால் சிக்கல்
சென்னை: மதுரையை சேர்ந்த யூடியுபர் சிக்கந்தரை செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Recommended Video
மதுரை சுப்ரமணியபுரம் மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் சிக்கா என்ற சிக்கந்தர். யூடியூப்பில் பிரபலமாக இருந்து வருகிறார்.
கடந்த 2ம் தேதி வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக டிக் டாக் பிரபலமான சூர்யாதேவி என்பவர் தனது ஆண் நண்பருடன் வந்து சிக்கந்தரை வழிமறித்துள்ளார்.

பைக்கை மறித்து செருப்பால் தாக்குதல்
பைக்கை நிறுத்தியதும், சிக்கந்தரை செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். அதனை வீடியோவாக பதிவுசெய்து அதனை தங்களது யூடியூப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து, கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாறி மாறி குற்றச்சாட்டு
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில், சிக்கந்தர் மற்றும் சூர்யாதேவி இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். ஒரு கட்டத்தில் போலீசில் புகார் அளிக்க சிக்கந்தர் முடிவு செய்துள்ளார்.

போலீசில் புகார்
சூர்யாதேவி தன்னை தாக்கியதோடு, தொடர்ச்சியாக தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி சிக்கந்தர் நேற்றைய தினம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சூர்யா மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
அதன் அடிப்படையில் சூர்யா தேவி மீது 4 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்துபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததோடு சூர்யாதேவியுடன் வந்த ஆண் நண்பரை தேடிவருகின்றனர்.

ஆபாச வீடியோக்கள்
இதனிடையே சிக்கந்தரும், சூர்யாதேவியும், செருப்பால் மாறி மாறி தாக்கிகொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் இது போன்ற ஆபாச பேச்சுகள் , வீடியோக்களை பதிவிடும் நபர்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடவடிக்கை தேவை
பப்ஜி மதன் என்ற யூடியூபர் ஆபாசமாக பேசி சாட்டிங் செய்ததாகத்தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால், பல்வேறு பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் பச்சை பச்சையாக ஆபாசமாக பேசி இப்போதும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். யூடியூப் வீடியோ தளத்தில் இது அதிகமாகத் தென்படுகின்றன. ஆனால் மதன் மீது மட்டும் நடவடிக்கை எடுத்த காவல்துறை இவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன் என்ற கேள்விகளை, பலரும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications