ரவுடி பேபி சூர்யா மீது 4 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு.. யூடியூபரை செருப்பால் அடித்ததால் சிக்கல்
சென்னை: மதுரையை சேர்ந்த யூடியுபர் சிக்கந்தரை செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Recommended Video
மதுரை சுப்ரமணியபுரம் மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் சிக்கா என்ற சிக்கந்தர். யூடியூப்பில் பிரபலமாக இருந்து வருகிறார்.
கடந்த 2ம் தேதி வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக டிக் டாக் பிரபலமான சூர்யாதேவி என்பவர் தனது ஆண் நண்பருடன் வந்து சிக்கந்தரை வழிமறித்துள்ளார்.

பைக்கை மறித்து செருப்பால் தாக்குதல்
பைக்கை நிறுத்தியதும், சிக்கந்தரை செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். அதனை வீடியோவாக பதிவுசெய்து அதனை தங்களது யூடியூப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து, கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாறி மாறி குற்றச்சாட்டு
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில், சிக்கந்தர் மற்றும் சூர்யாதேவி இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். ஒரு கட்டத்தில் போலீசில் புகார் அளிக்க சிக்கந்தர் முடிவு செய்துள்ளார்.

போலீசில் புகார்
சூர்யாதேவி தன்னை தாக்கியதோடு, தொடர்ச்சியாக தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி சிக்கந்தர் நேற்றைய தினம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சூர்யா மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
அதன் அடிப்படையில் சூர்யா தேவி மீது 4 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்துபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததோடு சூர்யாதேவியுடன் வந்த ஆண் நண்பரை தேடிவருகின்றனர்.

ஆபாச வீடியோக்கள்
இதனிடையே சிக்கந்தரும், சூர்யாதேவியும், செருப்பால் மாறி மாறி தாக்கிகொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் இது போன்ற ஆபாச பேச்சுகள் , வீடியோக்களை பதிவிடும் நபர்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடவடிக்கை தேவை
பப்ஜி மதன் என்ற யூடியூபர் ஆபாசமாக பேசி சாட்டிங் செய்ததாகத்தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால், பல்வேறு பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் பச்சை பச்சையாக ஆபாசமாக பேசி இப்போதும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். யூடியூப் வீடியோ தளத்தில் இது அதிகமாகத் தென்படுகின்றன. ஆனால் மதன் மீது மட்டும் நடவடிக்கை எடுத்த காவல்துறை இவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன் என்ற கேள்விகளை, பலரும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கிறார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications