தப்பு இருந்தா சிபிஐ விசாரணை வைங்க.. ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய திருநாவுக்கரசின் வைரல் வீடியோ
கைதான பொள்ளாச்சி திருநாவுக்கரசு சிபிஐக்கு சவால் விட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: 200 இளம் பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததும் இல்லாமல், "என் மேல தப்பு இருந்தா என்னை சிபிஐ விசாரணை நடத்துங்க" என்று தில்லாக சவால் விட்டு பேசிய இளைஞர் திருநாவுக்கரசின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 3 பேரில் ஒருவரான திருநாவுக்கரசு இன்று தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
கல்லூரி பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுக்கும் சமாச்சாரம் வெளியில் தெரிந்தவுடன் இவர் தலைமறைவாகிவிட்டார். அந்த சமயத்தில் ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். அதில், இந்த வழக்கில் நிறைய அரசியல் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நேற்று மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சிபிஐ-க்கே சவால் விடுத்து பேசி உள்ளார் இளைஞர் திருநாவுக்கரசு. அதில் அவர் பேசி உள்ளதாவது:
தென் சென்னையிலும், மத்திய சென்னையிலும் துண்டை விரித்துப் போட்டு மெளனமாக காத்திருக்கும் மைத்ரேயன்!
திரு பேசறேன்
"ஹாய்..எல்லாருக்கும் வணக்கம்.. நான் திரு பேசுறேன். எவ்வளவு நாளுதான் நான் இப்படியே சுத்திட்டிருக்கிறதுனு தெரியல. ஸோ.. நாளைக்கு (இன்று) நான் பொள்ளாச்சி வர்றேன். கண்டிப்பாக என்னை போலீஸ் அரெஸ்ட் பண்ணிருவாங்க. பொள்ளாச்சி பொதுமக்களுக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.
நல்லா திட்டிட்டீங்க
அந்த பொண்ணு குடுத்த வழக்கு பொய்யான வழக்கு. நான், சிபிஐ கிட்ட கொடுக்க சொன்னேன். அதுக்கு எந்த ஸ்டெப்பும் எடுக்கல. என்னையும் சரி, எனது ஃபேமிலியையும் சரி எல்லாருமே நல்லா திட்டிட்டீங்க. பரவாயில்லை. நான் நல்லா இருக்கையில என்னை எல்லாருமே பாராட்டினீங்க.
தண்டிக்காதீங்க
இந்த நிலைமையில ரொம்ப கஷ்டமா இருக்கு. வேற ஏதாச்சும் ஒரு பொண்ணு சாட்சியோட புகார் தந்தா சிபிஐ அதை விசாரிச்சு, அந்த தண்டனையை நான் கண்டிப்பா ஏத்துக்கறேன். செய்யாத தப்புக்கு என்னை தண்டிச்சிடாதீங்க. எனக்கு எதிரிங்க அதிகமாக இருக்காங்க. அவங்களே என்ன வேணும்னாலும் பண்ணலாம்.
பொள்ளாச்சி வந்துருவேன்
கட்சியிலும் சரி, பிசினசிலும் சரி.. ரொம்ப கஷ்டமா இருக்கு. தப்பு நான் செய்யவே இல்லை.. வழக்கு குடுத்த பொண்ணையே விசாரித்து பாருங்கள். அந்த பொண்ணுக்கிட்ட நான் பேசினது கூட இல்லை. நாளைக்கு நான் பொள்ளாச்சி வந்துருவேன். மீடியாக்காரங்களும் சரி, பொள்ளாச்சி பொதுமக்களும் சரி எல்லோருமே எனக்கு சப்போர்ட் பண்ணுங்க" இவ்வாறு அவர் பேசியிருந்தார்.