சென்னையில் தண்ணீருக்கு கஷ்டம்... இப்போ காற்றும் விஷமாகிறது... ஷாக் ரிப்போர்ட்
Recommended Video
சென்னை: சென்னையில் வீசும் காற்றில் உள்ள மாசு அளவை வருடம் தோறும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது. இந்த வருடம் வெளியிடப்பட்ட அறிக்கை சென்னைவாசிகளுக்கு ஷாக் தருவதாக அமைந்துள்ளது.
தேசிய காற்று தர கண்காணிப்பு திட்டத்தின் கீழ் சென்னையில் அடையாறு, தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், நுங்கம்பாக்கம் ஆகிய ஐந்து பகுதிகளில் காற்றின் தரம் சோதிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஏர் குவாலிட்டி இண்டக்ஸ் எனப்படும் சென்னை நகரில் நிலவும் காற்றின் மாசு அளவு குறித்த அறிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
காற்றில் அனுமதிக்கப்பட்ட மாசுவின் அளவு பிஎம்-10க்கு 60 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர், பிஎம்-2.5க்கு 40மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையிலுள்ள பிற பகுதிகளிலும் பிஎம்-10 மாசுவின் அளவு 100 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. இந்த அறிக்கையில் சென்னை நகரிலுள்ள அண்ணா நகர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் காற்றின் மாசு அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

காற்றும் விஷமாகிறது
அதன்படி, சென்னையில் காற்றின் மாசு அளவு அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் காற்றில் கலந்துள்ள மாசுவின் அளவு சில நாட்கள் மட்டுமே குறைந்து காணப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் மரங்கள் சற்று அடர்த்தியாக உள்ள பகுதிகள், கடலோரத்தில் இருக்கும் பகுதிகள் ஆகியவற்றில் காற்று மாசு சற்று குறைந்து காணப்படும்.

காற்றுமாசு அதிகம்
அடையாறு போன்ற பகுதிகள் காற்று மாசு சற்று குறைவாக உள்ள பகுதிகளாகும். ஆனால் இப்போது எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி காற்றின் தரநிலை மிக மோசமடைந்துள்ளது. இருப்பினும் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் அடையாறு பகுதியில் இந்த மாசுவின் அளவு 107ஆக உள்ளது. இது சென்னையின் குறைந்த அளவாகும். மேலும் சென்னையில் கடந்த 2016-17 ஆண்டு நிலவிய காற்றின் மாசுபாட்டுடன் ஒப்பிடும் போது தற்போது காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் பிஎம்-10 மாசு அளவு 173 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் அளவீட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

துகள்களின் விகிதமும் உயர்வு
காற்றில் உள்ள சல்பர் டையாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு ஆகியவற்றின் வருடாந்திர சராசரி மதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்துள்ளதாக தற்போது வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வரும் 28 நிலையங்களிலும் இதே நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் துகள்களின் விகிதமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துகள்களின் அளவு அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 173 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

வாகனப் புகை
சாலைகளில் வெளியாகியுள்ள மணற்துகள்கள், வாகனப் புகை போன்றவற்றால் துகள்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தியாகராய நகரில் 138 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர், அண்ணா நகரில் 161 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர், அடையாற்றில் 107 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர், கீழ்ப்பாக்கத்தில் 128 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் என்ற விகிதத்தில் துகள்களின் அளவு அதிகரித்துள்ளது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முந்தைய அறிக்கைகளுடன் தற்போதைய அறிக்கையை ஒப்பிட்டால், சென்னையில் காற்று மாசு மிக மோசமடைந்திருப்பது தெரிகிறது. சென்னையில் பிஎம்-10 மாசு அதிகரித்ததற்கு, அதிகப்படியான வாகன போக்குவரத்தும் இவற்றால் ஏற்படும் புழுதியுமே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications