ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட முருகனின் ஐம்பொன் சிலை... தடுத்து நிறுத்தி பொன் மாணிக்கவேல் அதிரடி
Recommended Video

சென்னை : ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட முருகன் ஐம்பொன் சிலையை சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடியாக பிடித்தனர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு தனியார் லேத் பட்டறையில் ஐம்பொன் சிலை ஒரு கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

விசாரணை
அப்போது சிவகுமார், தேவனடிகள், முகேஷ் ஆகிய 3 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டது. முதலில் அந்த சிலையை மண்ணில் இருந்து தோண்டி எடுத்ததாக சிவகுமார் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் விசாரிக்க வேண்டிய வகையில் விசாரணை நடத்தினர்.

சிலை கடத்தல்
அப்போது அரக்கோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் 2 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டு வந்ததை ஒப்புக் கொண்டார். இவர் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் நீண்ட தாடியுடன் சாமியார் போல கோயில்களில் வலம் வந்த தேசனடிகள் மூலம் இந்த சிலை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

விலை பேசியது
சிலையை கன்னியாகுமரியைச் சேர்ந்த முகேஷ் செனஅனை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் இஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து ரூ. 1 கோடிக்கு விலை பேசியது தெரியவந்தது.

பேரம்
இதையடுத்து சிவக்குமார் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற 2 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறப்பு அதிகாரியாக பதவியேற்ற பொன் மாணிக்கவேல் அண்மையில் இந்து அறநிலையத்துறை அதிகாரி திருமகளை கைது செய்தார். இந்நிலையில் அடுத்த அதிரடியாக கோடிக்கு பேரம் பேசப்பட்ட சிலையை தடுத்து நிறுத்தினார். இந்த சிலை கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications