உலகத் தமிழ் தூதரே! உத்தம தலைவரே! சஞ்சீவியே... பிரதமர் மோடியை வரவேற்று பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்
சென்னை: பிரதமர் மோடிக்கு உலகத் தமிழ் தூதரே என புதிய அடைமொழி வழங்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
பிரதமர் மோடி இன்று தமிழகம், புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் பாஜகவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களிலும் மோடி பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பொன். ராதாகிருஷ்ணன் அடுத்தடுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவுகள்:
செல்லும் திசையெங்கும் தமிழின் பெருமையை பேசும் உலகத்தமிழ் தூதரே! வருக..வருக!! #TNWelcomesModi
தம் மக்கள் சேவைக்கென அரசியல் செய்வோர் மத்தியில், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் ஓய்வின்றி உழைக்கும் உத்தம தலைவரே! வருக..வருகவே!

பாரதத்தை உலக மருந்தகமாக உருமாற்றிய சஞ்சீவியே! வருக! வருகவே!!
உலகமே கொரோனா முடக்கத்தில் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது, உலகுக்கே வழிகாட்டும் ஒப்பற்ற முன்னெடுப்புகள் எடுத்த உன்னத தலைவரே! @narendramodi வருக! வருகவே!












Click it and Unblock the Notifications