Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..எத்தனை நாளைக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 12ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு மொத்தம் 10,749 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெளியூர்களில் இருந்து 6,183 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

சென்னை, கோவை,திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் இடம்பெயர்ந்த மக்கள் பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர் செல்வார்கள். ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தை பொங்கல் பண்டிகைகளை சொந்த ஊர் சென்று கொண்டாடுவார்கள். கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று கொண்டாடினர். இதற்கான 16ஆயிரம் சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டது.

Pongal festival 16,932 special buses run from Chennai says Minister Sivasankar

தமிழகத்தில் வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். 90% க்கும் மேற்பட்ட மக்கள் அரசு பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து கழகம் சார்பில் 300 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட பகுதிகளுக்கு விரைவு, சொகுசு மற்றும் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளுக்கான டிக்கெட் முன் பதிவு கடந்த டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கியது. தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பிவிட்டன. 13, 14 ஆகிய தேதிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கக்கூடிய விரைவு பஸ்களில் இடங்கள் இல்லாததால் பிற போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கி உள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்து இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டம், சென்னை, தலைமைச்செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார். ஆலோசனைக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் 6300 பேருந்துகளுடன் கூடுதலாக 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. முதல்நாள் போகி சனிக்கிழமை என்பதால் இந்த ஆண்டு 13ஆம் தேதி முதலே ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்குவார்கள். பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 16ஆம் தேதி முதல் சென்னைக்கு திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவரம் பேருந்து நிலையம், கே.கே. நகர் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Pongal festival 16,932 special buses run from Chennai says Minister Sivasankar

முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app மற்றும் தனியார் முன்பதிவு இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பயணிகளின் வசதிக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படும். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களின் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+