புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ.500! நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்த முடிவு
சென்னை: பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் தரப்படும். தமிழ்நாடு முழுக்க உள்ள ரேஷன் கடைகள் மூலம் இந்த இந்த பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும்.

கடந்தாண்டில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கத்தைக் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தாண்டும் அதேபோன்ற ஒரு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
பொங்கல் பரிசு: இதற்கிடையே இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதவது பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. அதில் மாநிலத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.
இந்தாண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரூ. 238.92 செலவில் தமிழக மக்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதேநேம் தமிழ்நாட்டில் இந்தாண்டில் ரொக்கம் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தமிழ்நாட்டைப் போலவே புதுவையிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
பரிசுத் தொகை: புதுவையில் கடந்த 2022ஆம் ஆண்டில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 10 பொருட்களைக் கொண்ட பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்குத் தரப்பட்டது. அதேநேரம் கடந்த 2023 ஆண்டில் பொங்கல் பரிசு தொகுப்பிற்குப் பதில் 470 ரூபாய் வழங்கப்பட்டது. இந்தத் தொகை நேரடியாகப் புதுச்சேரி மக்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே இந்தாண்டும் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
நேரடியாக வங்கிக் கணக்கிற்கு: இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பிற்குப் பதிலாக 500 ரூபாயை வழங்கத் புதுச்சேரி அரசு வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு சுமார் 3.53 லட்சம் பேருக்கு தலா 500 ரூபாய் வழங்கப் புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு நேரடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிகிறது.
அங்குள்ள 1.30 லட்சம் சிகப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச ஆடைகளுக்குப் பதிலாக, நேரடியாக வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்போது இந்த அறிவிப்பைப் புதுவை அரசு வெளியிட்டுள்ளது.
-
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம்












Click it and Unblock the Notifications