புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ.500! நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்த முடிவு
சென்னை: பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் தரப்படும். தமிழ்நாடு முழுக்க உள்ள ரேஷன் கடைகள் மூலம் இந்த இந்த பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும்.

கடந்தாண்டில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கத்தைக் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தாண்டும் அதேபோன்ற ஒரு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
பொங்கல் பரிசு: இதற்கிடையே இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதவது பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. அதில் மாநிலத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.
இந்தாண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரூ. 238.92 செலவில் தமிழக மக்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதேநேம் தமிழ்நாட்டில் இந்தாண்டில் ரொக்கம் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தமிழ்நாட்டைப் போலவே புதுவையிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
பரிசுத் தொகை: புதுவையில் கடந்த 2022ஆம் ஆண்டில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 10 பொருட்களைக் கொண்ட பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்குத் தரப்பட்டது. அதேநேரம் கடந்த 2023 ஆண்டில் பொங்கல் பரிசு தொகுப்பிற்குப் பதில் 470 ரூபாய் வழங்கப்பட்டது. இந்தத் தொகை நேரடியாகப் புதுச்சேரி மக்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே இந்தாண்டும் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
நேரடியாக வங்கிக் கணக்கிற்கு: இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பிற்குப் பதிலாக 500 ரூபாயை வழங்கத் புதுச்சேரி அரசு வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு சுமார் 3.53 லட்சம் பேருக்கு தலா 500 ரூபாய் வழங்கப் புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு நேரடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிகிறது.
அங்குள்ள 1.30 லட்சம் சிகப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச ஆடைகளுக்குப் பதிலாக, நேரடியாக வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்போது இந்த அறிவிப்பைப் புதுவை அரசு வெளியிட்டுள்ளது.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications