பொங்கலோ பொங்கல்..குலவைசத்தம் எதிரொலிக்க பொங்கல் வைக்க நல்ல நேரம்..என்னென்ன கொண்டாட்டம்
சென்னை: பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. போகி தொடங்கி காணும் பொங்கல் வரைக்கும் கிராமங்களில் உற்சாகம் பொங்கி வழியும். எத்தனையோ திருவிழாக்கள் வந்தாலும் பொங்கல் திருவிழா என்பது அனைவராலும் மகிழ்ச்சி பொங்க இன்றைக்கும் கிராமங்களில் சிறப்பாக வீடுகளில் கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரத்தை பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும். தை மாதத்தில் பொங்கும் பொங்கல் போல நாள் முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. தை முதல்நாள் உத்தரயணத்தின் துவக்கம் ஆனி மாதம் முடியும் வரை உத்தராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி முடிய தட்சிணாயணம். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
ஜீவராசிகளின் வாழ்வாதத்திற்குத் தேவையான ஜீவனை தரும் சூரியனை போற்றும் விதமாகவும், விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அறுவடைத்திருநாளான பொங்கல் திருநாளுக்காக 10 நாட்களுக்கு முன்பே வீடுகளுக்கு வெள்ளையடித்து தயாராவது தமிழர் மரபு. வீடுகளை அலங்கரித்து மாவிலை தோரணங்கள் கட்டி, சிறுபீழைப்பூக்கள், கம்பு, ஆவாரம்பூ, வேப்பிலை வைத்து காப்பு கட்டி பொங்கலை வரவேற்பார்கள்.
2023 ம் ஆண்டில் ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 17 ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை வழக்கமாக ஜனவரி 14ஆம் தேதிதான் கொண்டாப்படும். பல வருடங்களுக்கு ஒருமுறை ஜனவரி 15 கொண்டாடப்படும். அது போல இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. விவசாயம் செழிக்க மழை வளத்தை தரும் இந்திரனுக்கு விழா எடுப்பதே போகி பண்டிகை.
தைப் பொங்கல் செழிப்பைக் குறிக்கிறது. மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புது ஆடைகள் அணிந்து சூரியபகவானை வழிபடுவார்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தை பொங்கல் மிக முக்கியமான நாள்.
கிராமப்புறங்களில் மக்கள் இந்த தை பொங்கலை திறந்த வெளியில் அல்லது தங்கள் வீட்டின் முற்றத்தில் கிழக்கு நோக்கி பொங்கல் வைப்பார்கள். அந்த பொங்கல் பொங்கி வந்ததும் கூடியிருக்கும் மக்கள் குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் கூறுவார்கள். பச்சரிசியை போட்டு வெந்த உடன் வெல்லம் போட்டு கலந்து பால் விட்டு ஏலக்காய், முந்திரி போட்டு கலந்து நெய் விட்டு இறக்கி வாசனை பொங்க படையலிடுவார்கள். கூடவே கரும்பு, காய்கறிகள், பழங்கள், கிழங்குகள் படைத்து சூரியனை வழிபடுவார்கள்.
இயற்கையை வழிபடுவதன் மூலம் செல்வ வளம் பெருகும் வாழ்வும் செழிக்கும் என்பது நம்பிக்கை.
ஜனவரி 14ஆம் தேதி போகிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15ஆம் தேதி சூரியனுக்காக பொங்கல் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் மகர சங்கராந்தியாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 16ஆம் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 17ஆம் காணும் பொங்கல்
கொண்டாடப்படுகிறது.
பொங்கல் வைக்க நல்ல நேரம் :
தை முதல் நாள் வீட்டு வாசலில் பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரையிலும் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும் நல்ல நேரமாகும். சிலர் மாலை நேரத்தில் பொங்கல் வைப்பார்கள். மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.
உழவர்களின் தோழனாக விவசாயம் செழிக்க உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தை 02ஆம் தேதி மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. கால்நடைகள் வசிக்கும் மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கோலமிட்டு சாம்பிராணி புகை போட்டு கால்நடைகளை அலங்கரிக்க வேண்டும். காலை 06.30 முதல் 07.30 வரை மாட்டு தொழுவத்தில் பொங்கலிடலாம். மாலை 04.30 முதல் 05.30 வரை பொங்கல் வைக்க நல்ல நேரமாகும்.
காணும் பொங்கல் நாளில் உறவுகளுடன் சேர்ந்து உற்சாகமாக பொங்கல் கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை நாளில் மகிழ்ச்சி பொங்க சகோதர சகோதரிகளுடன் இணைந்து கொண்டாட்டங்கள் களைகட்டும். கிராமங்களில் விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டிகள் என நான்கு நாட்களும் திருவிழா கோலமாக காட்சியளிக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications