உஷார்! சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின்சாரம் இருக்காது.. 'பவர் கட்' லிஸ்ட் இதோ!
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். பராமரிப்பு பணிகளுக்காகக் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னை நகரில் சில முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்ரவரி 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அம்பத்தூர்: திருவேற்காடு புளியம்பேடு சாலை, நீதிபதிகள் காலனி, தண்டலம், பெரிய தெரு மற்றும் ராஜாஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பெரம்பூர்: செம்பியம் காவிரி 1 முதல் 8வது தெரு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, செம்பியம் முழுப் பகுதி, பெரம்பூர் நெடுஞ்சாலை, கொடுங்கையூர், ஜி.என்.டி சாலை, காந்தி நகர், பி.பி. சாலை, மாதவரம் மற்றும் மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications