அரசியலில் குதிக்கும் பிரகாஷ்ராஜ்... தயாரிப்பாளர் சங்க பதவியை உதறுவாரா?
Recommended Video

சென்னை: அரசியலில் குதிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரஜினி, கமலுக்கு பிறகு அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் ஒரு நடிகர் என்றால் அவர் பிரகாஷ் ராஜ். இவரது நண்பரும் எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் வலதுசாரி அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் இவரது கோபம் வலது சாரிகள் பக்கம் வீரிட்டெழுந்துள்ளது.
இந்நிலையில் அவர் கடந்த 1-ஆம் தேதி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததோடு தான் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் அவர் பெங்களூர் மத்திய தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

விஷாலுக்கு
தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவராக உள்ள இவர் அப்பதவியை துறந்துவிட்டு போட்டியிடுவாரா, அல்லது அப்பதவியில் இருந்து விலக மறுத்து தேர்தலிலும் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு நிலை ஆர் கே நகர் இடைத்தேர்தலின் போது விஷாலுக்கு ஏற்பட்டது.

எதிர்ப்பு
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உள்ள விஷால் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினரில் எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசை எதிர்த்து விஷால் தேர்தலில் போட்டியிட்டால் தமிழக அரசால் சினிமா துறைக்கு எவ்வித நன்மையும் கிடைக்காத நிலை ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிராகரிப்பு
வேண்டுமானால் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பிறகு எந்த தேர்தலில் வேண்டுமானாலும் போட்டியிட்டுக் கொள்ளட்டும் என்று போர்க் கொடி உயர்த்தினர். இறுதியில் விஷால் எதிர்ப்பை மீறி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததும் அவரது வேட்புமனு செல்லாமல் நிராகரிக்கப்பட்டதும் வேறு கதை.

போட்டியிடுவார்
எனவே இந்த நிலை பிரகாஷ் ராஜுக்கு வருமா. இல்லை அவர் வேறு மாநிலத்தில்தானே போட்டியிடுகிறார் என எதிர்ப்புகள் கிளம்பாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் துணை தலைவர் பதவியில் இருந்தாலும் பிரகாஷ் ராஜ் செயல்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால்தான் இன்னொரு துணை தலைவராக பார்த்தீபன் நியமிக்கப்பட்டார். எனவே பிரகாஷ் ராஜே பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிவகார்த்திகேயனுக்கு சனி பிடித்துவிட்டது.. நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு.. மீண்டும் சிக்கிய தவெக -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications