அரசியலில் குதிக்கும் பிரகாஷ்ராஜ்... தயாரிப்பாளர் சங்க பதவியை உதறுவாரா?
Recommended Video

சென்னை: அரசியலில் குதிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரஜினி, கமலுக்கு பிறகு அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் ஒரு நடிகர் என்றால் அவர் பிரகாஷ் ராஜ். இவரது நண்பரும் எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் வலதுசாரி அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் இவரது கோபம் வலது சாரிகள் பக்கம் வீரிட்டெழுந்துள்ளது.
இந்நிலையில் அவர் கடந்த 1-ஆம் தேதி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததோடு தான் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் அவர் பெங்களூர் மத்திய தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

விஷாலுக்கு
தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவராக உள்ள இவர் அப்பதவியை துறந்துவிட்டு போட்டியிடுவாரா, அல்லது அப்பதவியில் இருந்து விலக மறுத்து தேர்தலிலும் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு நிலை ஆர் கே நகர் இடைத்தேர்தலின் போது விஷாலுக்கு ஏற்பட்டது.

எதிர்ப்பு
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உள்ள விஷால் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினரில் எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசை எதிர்த்து விஷால் தேர்தலில் போட்டியிட்டால் தமிழக அரசால் சினிமா துறைக்கு எவ்வித நன்மையும் கிடைக்காத நிலை ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிராகரிப்பு
வேண்டுமானால் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பிறகு எந்த தேர்தலில் வேண்டுமானாலும் போட்டியிட்டுக் கொள்ளட்டும் என்று போர்க் கொடி உயர்த்தினர். இறுதியில் விஷால் எதிர்ப்பை மீறி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததும் அவரது வேட்புமனு செல்லாமல் நிராகரிக்கப்பட்டதும் வேறு கதை.

போட்டியிடுவார்
எனவே இந்த நிலை பிரகாஷ் ராஜுக்கு வருமா. இல்லை அவர் வேறு மாநிலத்தில்தானே போட்டியிடுகிறார் என எதிர்ப்புகள் கிளம்பாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் துணை தலைவர் பதவியில் இருந்தாலும் பிரகாஷ் ராஜ் செயல்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால்தான் இன்னொரு துணை தலைவராக பார்த்தீபன் நியமிக்கப்பட்டார். எனவே பிரகாஷ் ராஜே பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications