கர்ப்பிணிகள், சுகர், பி.பி. நோயாளிகளுக்கு 2 மாதங்களுக்கான மாத்திரைகள் வழங்கப்படும்: தமிழக அரசு 'நச்'
சென்னை: மருந்து, மாத்திரைகள் தேவைப்படுவோருக்கு அடுத்த 2 மாதங்களுக்கு, இந்த மருந்துகள் கொடுக்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா நோய் தடுப்பு மற்றும், லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நல்வாழ்வு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, அரசு வெளியிட்ட அறிவிப்பு:

கர்ப்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், காசநோய் மற்றும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இதற்காக அலைந்து வந்து வாங்க வேண்டாம். அவர்களுக்கு அடுத்த, இரண்டு மாதங்களுக்கு மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். முதியோர், பெண்கள் போன்றோர் தங்களுக்கு மருத்துவ உதவி தேவை என்றால் 108 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜோமோட்டோ, ஸ்விக்கி, உபெர் ஈட்ஸ் மூலம் சமைத்த உணவை வழங்குவதற்கான தடை தொடரும். ஆனால் மூத்த குடிமக்கள் மற்றும் சமைக்க முடியாதவர்கள், சமைத்த உணவை உணவு வழங்குநர்களிடமிருந்து பெறுகிறார்கள். இது அனுமதிக்கப்படும். அத்தகைய சேவைகளில் ஈடுபடுபவர்கள் பேட்ஜ் அணிய வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் வழங்கல் மற்றும் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, சென்னை கார்ப்பரேஷனிலும் மற்ற அனைத்து மாவட்டங்களின் மாவட்ட தலைமையகத்திலும் ஒரு உதவி மையம் அமைக்கப்படும்.
தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் தினசரி / வாராந்திர / மாதாந்திர வட்டியை அசல் தொகையுடன் வசூலிக்கின்றன. மறு உத்தரவு வரும் வரை இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications