விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார்... மாவட்டச் செயலாளர்களிடம் உறுதி கொடுத்த பிரேமலதா..!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிரச்சாரத்துக்கு வருவார் என்ற உறுதியை வழங்கியுள்ளார் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதனிடையே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தேமுதிக நிர்வாகிகள்
நீண்ட காலத்துக்கு பிறகு தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றதோடு விஜயகாந்தின் உடல்நிலை பற்றி நேரில் கேட்டறிந்தனர். மேலும், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.

தேமுதிக பொதுக்குழு
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதுடன் தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ''கேப்டன் கண்டிப்பாக தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார், அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்'' என்றுக் கூறி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டினார்.

டாஸ்மாக் மூடல்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண குழு அமைக்க வேண்டும், தமிழகம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை பழுதுபார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் சந்திப்பு
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த கையோடு அனைத்து நிர்வாகிகளும் விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரனை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தலைமைக்கழக நிர்வாகிகள் தொடங்கி அடிமட்டத் தொண்டர்கள் வரை சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் விஜயபிரபாகரன்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications