ரஜினி உடல்நலம் குறித்து லதாவிடம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி! விரைவில் குணமடைய வாழ்த்து
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து, லதாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 30ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று பகுதியில் ஏற்பட்ட திடீர் வலி காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, இதயத்திலிருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை அனுப்பும் தமனியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக வலி ஏற்பட்டிருக்கிறது. இடுப்பு மற்றும் தொடையை இணைக்கும் பகுதியில் உள்ள தமனியில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

சிகிச்சை குறித்து மருத்துவமனை மருத்துவ இயக்குநா் டாக்டா் ஆா்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, "அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை (செப்.30) அனுமதிக்கப்பட்ட நடிகா் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் அயோட்டா தமனியில் வீக்கம் இருந்தது; முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா் சாய் சதீஷ், மகா தமனி வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் அடைக்கும் வகையில் ஸ்டென்ட் உபகரணத்தை இடையீட்டு சிகிச்சை மூலம் அந்த இடத்தில் பொருத்தினாா்.
இந்த ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை திட்டமிட்டபடி அவருக்கு செய்யப்பட்டது. தற்போது ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது. இரு நாள்களில் அவா் வீடு திரும்புவாா்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து அவரது மனைவி லதாவிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வயிலாக நலம் விசாரித்திருக்கிறார். ரஜினி விரைந்து பூரண குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications