சிறையில் என்னை யாருமே பார்க்க வரவில்லை... வேதனையோடு சொன்ன நிர்மலாதேவி!
Recommended Video

சென்னை : சிறையில் இருக்கும் தன்னை ஒருவர் கூட பார்க்க வரவில்லையே என்று மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார். சிறை செல்வதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முருகன், கருப்பசாமிக்காக மாணவிகளிடம் தூது போக இப்போது அவர்கள் கூட திரும்பிப் பார்க்கவில்லை என்ற வேதனையை நிர்மலாதேவி இவ்வாறு வெளியிட்டுள்ளார்.
கல்லூரிகளில் இதுவரை திரைமறைவில் நடந்து வந்த மாணவிகளுக்கான பாலியல் தொல்லைகள் பேராசிரியர் நிர்மலாதேவியால் பகிரங்கமாக வெளிப்பட்டது. கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை மூளைச் சலவை செய்து தனக்கு நெருக்கமான பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமிக்கு விருந்தாக்க நினைத்து தொலைபேசியில் போட்ட வலை அவரையே கிழித்து நார் நாராக தொங்க விட்டுள்ளது. பாடம் கற்றுக்கொடுக்க வேண்டிய மாணவிகளுக்கு நிர்மலாதேவி எடுத்த தவறான பாடம் எடுபடவில்லை.
பணியாசை, பணத்தாசை காட்டிய போது மசியாத மாணவிகள் இது தொடர்பாக இனி எங்களிடம் பேச வேண்டாம் என்று கறாராக சொல்லிவிட்டனர். இரு முனை பேச்சுவார்த்தை தான் இது யாருக்குத் தெரியப் போகிறது என்று நினைத்த நிர்மலாதேவியின் கனவு பொய்யானது. ஆடியோ விவகாரம் பூதாகரமாக வெடிக்க அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதோடு கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

அடேங்கப்பா லிஸ்ட்
சிபிசிஐடி விசாரணையில் நிர்மலாதேவி கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் படிக்கவும், கேட்கவும் கூசுகின்றன. வரைமுறை இல்லாமல் கணவரின் நண்பர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி என்று தனக்கு தெரிந்தவர்களுடன் தனிமையில் நெருக்கமாக இருந்திருக்கிறார் நிர்மலாதேவி. வடிவேலு காமெடியில் வருவது போல லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

உதவி கேட்டு அலைந்தேன்
இந்நிலையில் தான் கைது செய்யப்படும் செய்தியை அறிந்து உதவி கேட்ட போது அனைவருமே தன்னை கைவிட்டுவிட்டதாக நிர்மலா தேவி வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். ஏப்ரல் 14ம் தேதி ஆடியோ வெளியானதையடுத்து கருப்பசாமியை போனில் தொடர்பு கொள்ள முயன்றேன் ஆனால் அவர் என்னுடைய எண்ணை பிளாக் செய்துவிட்டார். பின்னர் எஸ்எம்எஸ் அனுப்பினேன் அதற்கும் பதில் இல்லை.

முருகன், மாணவிகளுக்கு எஸ்எம்எஸ்
பின்னர் முருகனிடம் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டேன். ஏப்ரல் 15,16ல் நான் அவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பினேன். ஆனால் அவரும் பதில் அனுப்பவே இல்லை. 14 மற்றும் 15ம் தேதிகளில் மாணவிகளுக்கும் தொடர்ந்து எஸ்எம்எஸ் அனுப்பினேன் அப்போதும் பதில் இல்லை. போலீசார் என்னை கைது செய்ய வந்த போதும் உதவி கேட்டு என்னுடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன், ஆனால் யாருமே பதில் அளிக்கவில்லை.

பார்க்க யாருமே வரலயே
மாணவிகளிடம் தொலைபேசியில் பேசியதால் தான் நான் வசமாக சிக்கிக்கொண்டேன். நான் யாருக்காக பேசினேனோ அவர்கள் யாருமே எனக்கு உதவவில்லை, சொல்லப்போனால் சிறையில் இருக்கும் என்னை யாருமே வந்து பார்க்கவில்லை. இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என்று நிர்மலாதேவி வேதனையோடு கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications