சிறையில் என்னை யாருமே பார்க்க வரவில்லை... வேதனையோடு சொன்ன நிர்மலாதேவி!
Recommended Video

சென்னை : சிறையில் இருக்கும் தன்னை ஒருவர் கூட பார்க்க வரவில்லையே என்று மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார். சிறை செல்வதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முருகன், கருப்பசாமிக்காக மாணவிகளிடம் தூது போக இப்போது அவர்கள் கூட திரும்பிப் பார்க்கவில்லை என்ற வேதனையை நிர்மலாதேவி இவ்வாறு வெளியிட்டுள்ளார்.
கல்லூரிகளில் இதுவரை திரைமறைவில் நடந்து வந்த மாணவிகளுக்கான பாலியல் தொல்லைகள் பேராசிரியர் நிர்மலாதேவியால் பகிரங்கமாக வெளிப்பட்டது. கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை மூளைச் சலவை செய்து தனக்கு நெருக்கமான பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமிக்கு விருந்தாக்க நினைத்து தொலைபேசியில் போட்ட வலை அவரையே கிழித்து நார் நாராக தொங்க விட்டுள்ளது. பாடம் கற்றுக்கொடுக்க வேண்டிய மாணவிகளுக்கு நிர்மலாதேவி எடுத்த தவறான பாடம் எடுபடவில்லை.
பணியாசை, பணத்தாசை காட்டிய போது மசியாத மாணவிகள் இது தொடர்பாக இனி எங்களிடம் பேச வேண்டாம் என்று கறாராக சொல்லிவிட்டனர். இரு முனை பேச்சுவார்த்தை தான் இது யாருக்குத் தெரியப் போகிறது என்று நினைத்த நிர்மலாதேவியின் கனவு பொய்யானது. ஆடியோ விவகாரம் பூதாகரமாக வெடிக்க அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதோடு கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

அடேங்கப்பா லிஸ்ட்
சிபிசிஐடி விசாரணையில் நிர்மலாதேவி கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் படிக்கவும், கேட்கவும் கூசுகின்றன. வரைமுறை இல்லாமல் கணவரின் நண்பர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி என்று தனக்கு தெரிந்தவர்களுடன் தனிமையில் நெருக்கமாக இருந்திருக்கிறார் நிர்மலாதேவி. வடிவேலு காமெடியில் வருவது போல லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

உதவி கேட்டு அலைந்தேன்
இந்நிலையில் தான் கைது செய்யப்படும் செய்தியை அறிந்து உதவி கேட்ட போது அனைவருமே தன்னை கைவிட்டுவிட்டதாக நிர்மலா தேவி வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். ஏப்ரல் 14ம் தேதி ஆடியோ வெளியானதையடுத்து கருப்பசாமியை போனில் தொடர்பு கொள்ள முயன்றேன் ஆனால் அவர் என்னுடைய எண்ணை பிளாக் செய்துவிட்டார். பின்னர் எஸ்எம்எஸ் அனுப்பினேன் அதற்கும் பதில் இல்லை.

முருகன், மாணவிகளுக்கு எஸ்எம்எஸ்
பின்னர் முருகனிடம் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டேன். ஏப்ரல் 15,16ல் நான் அவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பினேன். ஆனால் அவரும் பதில் அனுப்பவே இல்லை. 14 மற்றும் 15ம் தேதிகளில் மாணவிகளுக்கும் தொடர்ந்து எஸ்எம்எஸ் அனுப்பினேன் அப்போதும் பதில் இல்லை. போலீசார் என்னை கைது செய்ய வந்த போதும் உதவி கேட்டு என்னுடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன், ஆனால் யாருமே பதில் அளிக்கவில்லை.

பார்க்க யாருமே வரலயே
மாணவிகளிடம் தொலைபேசியில் பேசியதால் தான் நான் வசமாக சிக்கிக்கொண்டேன். நான் யாருக்காக பேசினேனோ அவர்கள் யாருமே எனக்கு உதவவில்லை, சொல்லப்போனால் சிறையில் இருக்கும் என்னை யாருமே வந்து பார்க்கவில்லை. இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என்று நிர்மலாதேவி வேதனையோடு கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications