சொத்து வரி..குடிநீர் வரி.. மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி... முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுக்கள்
சென்னை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் குவியத் தொடங்கியுள்ளன.
கொரோனா பாதிப்பு தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மின் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக பொதுமக்கள் கடந்த முறை (பிப்ரவரியில்) செலுத்திய மின்சார கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கையால் 80 சதவீத மக்கள், இனி அடுத்து எடுக்க உள்ள அளவீட்டிற்கு பிறகு கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும்.

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இது பெரும் சுமையாகும். தொழிசாலைகள் வணிக நிறுவனங்களுக்கான அளவீட்டை அவர்களே எடுத்து, மின்சார வாரியத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது போன்ற நடைமுறையை வீடுகளுக்கும் பயன்படுத்த வேண்டும் அல்லது இரண்டு மாதங்கள் விலையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 31-க்குள் மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றிற்கு 3 மாதம் அவகாசம் அளித்து, அதாவது ஜூன் 30- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், ஒப்பந்தத் தொழிலாளார்கள் உள்ளிட்ட பலர் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பரங்கிப்பேட்டை சேர்ந்த கலீல் என்பவர், சொத்து வரி, குடிநீர் வரி, மற்றும் மின்சார கட்டணத்தை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார். இவர் மட்டுமல்லாமல் இவரை போலவே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications