தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி பரபரப்பு புகார்.. அதிமுக வழக்கில் அன்று சிவி சண்முகம் பேசியது என்ன?
சென்னை: இரட்டை இலை மற்றும் பொதுச் செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தடையானையை ரத்து செய்துவிட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தை வெறும் குமாஸ்தா என்று இழிவுபடுத்தி பேசியதாக சிவி சண்முகம் மீது புகழேந்தி புகார் அளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை அடுத்து விசாரணையை தொடர வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணை நடத்தக்கூடாது என்றும், தேர்தல் ஆணையம் விசாரணை தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. மேலும் அதிமுக தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இதுபற்றி அன்றைக்கே சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி. சண்முகம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "அதிமுக தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு இரண்டு அதிகாரங்கள் மட்டுமே உள்ளது. ஒன்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29A, மற்றொன்று பாரா 15 (தேர்தல் சின்னம் தொடர்பானவை). ஒரு கட்சியைப் பதிவு செய்ய வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் விதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அவை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு இருக்கிறதா என்று பார்த்து முடிவெடுக்க வேண்டும் என்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு என்கிறது 29A.
அதே பிரிவில், 29A (9) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியில் பொறுப்பாளர்கள் மாற்றம், பெயர் மாற்றம், விதிகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாகத் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரியப்படுத்தும்போது அதைப் பதிவு செய்ய வேண்டியது மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் வேலை. வெறும் குமாஸ்தா வேலை மட்டும் தானே தவிர, அது சரியா தவறா என்று பார்க்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது.
மேலும் ஒரு கட்சியில் பொறுப்பாளர்கள் மாற்றம், பெயர் மாற்றம், விதிகளில் மாற்றங்கள் மீது ஆட்சேபனைகள் இருந்தால் அதை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அதேபோல், ஒரு இயக்கத்தில் பிளவு ஏற்பட்டால், நாங்கள்தான் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு குழு கூறினால், தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அந்தக் குழுவிடம் விசாரணை செய்து, யார் உண்மையான அந்த அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று சொல்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ள என்கிறது பாரா 15.
எனவே இந்த தகவல்களின் படி, உள்கட்சி விவகாரங்களில் தலையிட தங்களுக்கு உரிமை இல்லை என்று தேர்தல் ஆணையம் நீதிமன்ற விசாரணையில் ஒப்புக்கொண்டுவிட்டது. ஆனாலும் நீதிமன்றத்தில் இப்படித் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதைத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகத் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொண்டதை நாங்கள் எதிர்க்கிறோம்" என்று சிவி சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கடந்த வாரம் கூறியிருந்தார்.
இதனிடையே இரட்டை இலை மற்றும் பொதுச் செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், இது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி 18 ஆம் தேதி இன்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றினை சமர்ப்பித்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள ஆணையை சமர்ப்பித்து உடனடியாக அண்ணா திமுக இரட்டை இலை சம்பந்தமான வழக்கை தாமதமின்றி தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும், மேலும் எடப்பாடி பழனிசாமி அணியை சார்ந்த சி வி சண்முகம் எம்பி, தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை குமாஸ்தா (clerical job) வேலையை பார்க்க மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என இழிவாக பேசியுள்ளதையும் புகாராக குறிப்பிட்டுள்ளார் ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார்.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications