Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கி கணக்குகளுக்கு சிக்கல்.. அலர்ட்! நாளை முதல் உங்க அக்கவுண்ட் முடக்கப்படலாம்! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் வங்கி கணக்கு நீண்ட காலமாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாமல் இருந்தால் நாளை முதல் மூடப்படும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத, அக்கவுன்ட்டில் பண இருப்பு இல்லாத வாடிக்கையாளர்களின் செயலற்ற வங்கிக் கணக்கை மூட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Banks bank account finance

வங்கிக் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தவிர்க்கவும், ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எந்த கணக்குகள் மூடப்படும்?: கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வங்கிக் கணக்கில் எந்த பரிவர்த்தனையும் செய்யாத, பூஜ்ஜிய இருப்புக் கொண்டவர்களின் கணக்குகள் ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு எந்தவித அறிவிப்பும் இன்றி மூடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நீங்கள் உங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கை 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தால் உங்கள் வங்கி கணக்கு நாளை முதல் மூடப்படலாம். இதுதொடர்பாக, வங்கியில் இருந்து வாடிக்கைகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இன்றுடன்: தகவல் அனுப்பப்பட்ட ஒரு மாதத்தில் இந்த கணக்குகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நீங்கள் அந்தக் கணக்குகளை செயலில் வைத்திருக்க விரும்பினால், வங்கிக் கிளைக்குச் சென்று உடனடியாக KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் ஜூன் மாதம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஏராளமான வங்கி கணக்குகள் செயலற்ற நிலையில் இருப்பதால், அந்த கணக்குகள் மூடப்படுவதாகத் தெரிகிறது.

இந்த கணக்குகள் மூடப்படாது: அதே சமயம், டிமேட் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட கணக்குகள், லாக்கர்கள், 25 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட மாணவர்களின் கணக்குகள், சிறுவர்களின் வங்கிக் கணக்குகள் மூடப்படாது.

மேலும், PMJJBY/PMSBY/SSY/APY, DBT போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக திறக்கப்பட்ட கணக்குகள் மற்றும் வருமான வரித்துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் முடக்கப்பட்ட கணக்குகள் அல்லது வேறு ஏதேனும் சட்டபூர்வ அதிகாரிகளால் முடக்கப்பட்ட கணக்குகள் மூடப்படாது.

உங்கள் வங்கி கணக்கு மூடப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?:

உங்களது பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கு மூடப்பட்டிருந்தால், அக்கவுன்ட்டை மீண்டும் செயல்படுத்த கேஓய்சி (KYC) ஆவணங்களை உங்கள் அருகிலுள்ள வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்காக அடையாளச் சான்று (பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இவைகளில் ஏதேனும் ஒன்று) மற்றும் முகவரி ஆதாரம் (ஆதார் கார்டு, மின்சார பில், தண்ணீர் பில், வீட்டு வரி போன்றவற்றில் ஏதேனும் ஒன்று) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+