எடப்பாடியிடம் அதிமுக கட்சி இருக்கிறதா? ரகுபதி பரபரப்பு பேட்டி! ஈரோடு தேர்தலில் நடந்த "ஓட்டு ஷிப்ட்?"
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஓட்டும் திமுகவிற்குதான் கிடைத்துள்ளது என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரக்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக 1,15,709 வாக்குகளை பெற்றது. அது போல் நாம் தமிழர் கட்சி 24,151 வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடாததால் அவர்களது தொண்டர்கள் யாருக்கு வாக்களித்திருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இதற்காகத்தான் கடந்த 2025 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் வாக்குகளை ஒப்பிட்டு திமுகவினர் ஒருசில தகவல்களை பரப்பி வந்தனர். அதன்படி ஈரோடு கிழக்கில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 86,646 வாக்குகளை பெற்றுள்ளார். அது போல் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 34,817 வாக்குகளை பெற்றுள்ளார்.
மேலும் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விஜயகுமார் 12784 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகம் 12,802 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
அந்த வகையில் மக்களவை தொகுதியில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்குள்பட்ட பகுதியில் திமுக பெற்ற வாக்குகளையும் அதிமுக பெற்ற வாக்குகளையும் சேர்த்தால் 1,21,463 வாக்குகள் வருகின்றன. இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சந்திரகுமார் பெற்ற 1,15,709 வாக்குகளுக்கு கிட்டதட்ட வந்துவிடுகின்றன.
அது போல் மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் பெற்ற வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளையும் சேர்த்தால் 25,586 வருகின்றன. இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக சீதாலட்சுமி பெற்ற 24,151 வாக்குகளுக்கு கிட்டதட்ட வந்துவிட்டது. இதை நாம் தமிழர் கட்சி பல்வேறு டிவி விவாதங்களில் மறுத்து வந்தது.
அதாவது கடந்த முறை நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவை "எங்களுக்கு ஆதரவு தருமாறு" நாங்கள் கேட்டும் எங்களுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை அனைவரும் அறிவர். அது போல் "பாஜக வாக்கும் எங்களுக்கு வந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள்.
"ராமரும் வேண்டாம், ராமசாமியும் வேண்டாம்" என எங்கள் தலைவர் சீமான் கூறியுள்ளார். எனவே ராமரை பற்றி பேசியதால் எங்களுக்கு பாஜக ஓட்டு எப்படி கிடைக்கும். மக்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க தொடங்கிவிட்டனர். ஆளும் கட்சியின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பவில்லை" என நாதக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளரான பிறகு 11 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளார். அவரிடம்தான் கட்சி இருக்கிறதா என்பதை முன்னாள் அமைச்சர்கள் பேசும் பேச்சுகளில் தெரிகிறது. அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டு வரவே எடப்பாடி பழனிசாமி படாதபாடுபட்டு வருகிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஓட்டும் திமுகவிற்குத்தான் கிடைத்துள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இத்தனை நாட்களாக திமுக ஐடி விங் நிர்வாகிகள் சோசியல் மீடியாவில் கூறி வந்த நிலையில் தற்போது அமைச்சர் ஒருவரே இது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications