அடுத்த 4 நாளைக்கு நல்ல மழை இருக்கு 2019ல் தமிழகத்தில் இயல்பைவிட 4 சதவீதம் குறைவு.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் 907 மிமீ மழைப் பதிவாகியுள்ளதாகவும், இது இயல்பைவிட 4 சதவீதம் குறைவு என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டு பெய்த மழையின் அளவு மற்றும் புயலின் தாக்கம், வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவான மழை அளவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு 454 மில்லி மீட்டர் அளவுக்கு பெய்திருக்கிறது என்றும் வழக்கமாக 447 மில்லி மீட்டர் அளவுக்குத்தான் பெய்யும் என்றும் கூறினார்.

பெரம்பலூரில் குறைவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது அதிகபட்சமாக மழை என்பது நீலகிரி மாவட்டத்தில் பெய்திருக்கிறது என்றும் அங்கு இயல்பை விட 65% அதிகமாக மழைப்பதிவாகி இருப்பதாகவும், அதேபோல் தமிழகத்தில் மிககுறைந்த அளவு மழை பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்திருக்கிறது என்றும் அங்கு இயல்பை விட 28% மிக குறைவாக மழைப்பதிவாகி உள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.

22 மாவட்டங்களில்
தமிழக மழை நிலவரம் குறித்து பேசிய வானிலை மைய இயக்குனர், தமிழகத்தில் இயல்பையொட்டி 22 மாவட்டங்களில் மழைப் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். அதேநேரம் 6 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப் பதிவாகியுள்ளதாகவும் 5 மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவான அளவில் மழை பெய்திருப்பதாகவும் கூறினார்.

3 வங்கக்கடலில்
2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டைத் 8 புயல்கள் தாக்கியதாக கூறிய பாலச்சந்திரன், அதில் 3 வங்கக் கடலிலிருந்து உருவானவை என்றம், 5 அரபிக் கடலிலிருந்தும் உருவானவை என்றும் கூறினார். 1966ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக இந்த ஆண்டு இந்திய பெருங்கடலில் இரு முனை நிகழ்வு ஏற்பட்டதாவும் தெரிவித்தார்.

2019ல் எவ்வளவு மழை
2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் 907 மிமீ மழைப் பதிவாகியுள்ளதாக கூறிய பாலசந்திரன், வழக்கமாக இந்த காலத்தில் 943 மிமீ மழை பொழிவு பதிவாகும் என்றும் அதன்படி பார்த்தார் 2019ம் ஆண்டு 4 சதவீதம் குறைவான மழைப் பொழிவு பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.

வானிலை மையம்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை, புதுவையில் 9 செமீ, சீர்காழியில் 6 செமீ மழைப் பொழிவும் பதிவாகியுள்ளதாகவும், . தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குனர் கூறினார்.சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications