"இரவோடு ஓவர்.." சென்னை மக்கள் எதிர்பார்த்த நியூஸ்.. ஒரே குரலில் சொல்லும் வானிலை ஆய்வு நிபுணர்கள்
சென்னை: சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை ஓயப் போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னை ரெயின், சென்னை வெதர் போன்ற முன்னணி தனியார் வானிலை ஆய்வு நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
பல பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில் இந்த தகவல் சென்னைவாசிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் நான்கு முறை மட்டும்தான் நவம்பர் மாதத்தில் 1,000 மில்லி மீட்டர் அளவுக்கு மேல் மழை பதிவாகியிருக்கிறது .

கன மழை
2015ஆம் ஆண்டு இதே போல மழை பதிவான நிலையில் இப்போது இந்த வருடம் மீண்டும் அதுபோன்ற கனமழை பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளிலும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கூடுவாஞ்சேரி உள்ளிட்ட தெற்கு சென்னையின் பல பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

படகுகள்
மக்கள் படகுகளை பயன்படுத்தி வெளியில் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் .போதும் போதும் என்ற அளவுக்கு மேல் மழை பெய்து விட்டதால் எப்போது மழை நிற்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.

மேக கூட்டங்களால் மழை பெய்யும்
இந்த நிலையில் தான் பல தனியார் வானிலை ஆய்வு நிபுணர்களும் சென்னைக்கு இன்று இரவுடன் மழை குறையத் தொடங்கிவிடும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். முதலில் சென்னை வெதர் என்ற தனியார் ஆய்வு அமைப்பு கணிப்பை பார்க்கலாம்- இதுபற்றி அவர்கள் கூறுகையில் , ஏற்கனவே எதிர்பார்த்தபடி நவம்பர் 26 முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை நல்ல மழை பொழிவு இருந்தது அடுத்த இரண்டு நாட்களுக்கு அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இன்று கூட சென்னையை கடந்து செல்லும் சில மேகக்கூட்டங்கள் காரணமாக அப்போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் இன்று இரவு முதல் சென்னையில் படிப்படியாக மழை குறைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Recommended Video

வெதர்மேன்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது கணிப்பில் கூறுகையில் டிசம்பர் 1ஆம் தேதி வரை அவ்வப்போது லேசான மழை இருக்கக் கூடும் ஆனால் மோசமான கனமழை ஓய்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறுகையில், நவம்பர் 29ம் தேதி இரவு முதல் சென்னையில் மழை அளவு குறையத் தொடங்கிவிடும். ஒட்டுமொத்தமாகவே இனிமேல் சென்னையில் மழை குறையும் என்று தெரிவித்துள்ளதோடு, சாட்டிலைட் படம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.

ஒரே கருத்து
முன்னணி தனியார் வானிலை ஆய்வாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். எனவே சென்னை மக்கள் இனிமேல் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.

பாதிப்பு சரி செய்யப்பட வேண்டும்
அதேநேரம், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இன்னும் வேகமாக மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் வெள்ளநீர் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications