தணிக்கை செய்த படத்திற்கு எதிராக போராடுவதா... சட்டத்திற்கு புறம்பான செயல் என ரஜினி கண்டனம்!
Recommended Video

சென்னை : தணிக்கை செய்த படத்தில் இருந்து காட்சிகளை நீக்க தவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்படுதும், பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்திற்கு புறம்பான செயல் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அதிமுகவை விமர்சனம் செய்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிதுமுகவினர் குற்றம்சாட்டினர்.
படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தனர். இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது.
[ஏ.ஆர். முருகதாஸ் வீட்டிற்கு சென்ற போலீஸ்... நள்ளிரவில் தீயாய் பரவிய கைது செய்தி! ]

போராட்ட களமான தமிழகம்
தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்கார் படத்திற்காகவும், நடிகர் விஜய்க்காகவும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு
சென்னையில் சர்கார் திரையிடப்பட்ட 68 தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு, முன்எச்சரிக்கையாக பேனர்களும் அகற்றப்பட்டன. பதற்றம் குறையும் வரை சென்னையில் திரையரங்குகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

படக்குழு சம்மதம்
சர்கார் படத்திற்கு தொடர்ந்து எழுந்த சர்ச்சையால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்பு கொண்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு உரிய சென்சார் அனுமதி பெற்று பின்னர் படம் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் எதிர்ப்பு
இதனிடையே சர்கார் படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பிற்கு நடிகர் கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தில் இருந்து காட்சிகளை நீக்கச் சொல்வது சரியானதல்ல என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
|
சட்டத்திற்கு புறம்பான செயல்
இந்நிலையில் நள்ளிரவில் சர்கார் திரைப்பட சர்ச்சை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த, தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications