போயஸ் கார்டனில் மக்கள் மன்றம் சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணிநேரம் மந்திராலோசனை
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.
நாளைய கூட்டத்தில் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் ரஜினிகாந்த் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
நாளை மீட்டிங்.. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ரஜினியாக ஆடுபவரின் ஆதங்கம்!
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையானது சுமார் 2 மணிநேரம் நீடித்தது.
நாளைய ஆலோசனை கூட்டத்தில் எவை எவை விவாதிக்கப்படலாம்? என்ன மாதிரியான முடிவை அறிவிக்கலாம்? என்பது தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தெரியவருகிறது.