30 ஆண்டுகால அரசியல் நாடகத்துக்கான க்ளைமாக்ஸ் முடிவை நாளையாவது வெளியிடுவாரா ரஜினிகாந்த்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமது கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 30 ஆண்டுகாலமாக அரசியலுக்கு வருகிறேன் என தமிழகத்தை பேச வைத்துள்ள பஞ்சாயத்துக்கு நாளையாவது ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துவிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Recommended Video
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூறி வந்தார். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்தார்.
ஆனால் ஆண்டுகள் உருண்டோடியும் ரஜினிகாந்த் கட்சியையே தொடங்கவில்லை. இது ரஜினி மீதான விமர்சனங்களை அறிவித்தது. மேலும் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் ஏப்ரல் மாதமும் கட்சியை ரஜினி அறிவிப்பார் என்கிற தகவல்களும் ரெக்கை கட்டி பறக்கும்.

மா.செ.க்கள் ஆலோசனை
எதுவும் நடந்தபாடில்லை என்பதால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்கிற கேள்வியும் எழுவதும் உண்டு. இந்நிலையில் அண்மையில் தமது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். இச்சந்திப்பை பாதியில் முடித்து கொண்ட ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது; அதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.

விவாதமான ஏமாற்றம்
இந்த ஏமாற்றம்? எது என்பது குறித்து இன்னமும் விவாதம் நடைபெற்று வருகிறது. ஒருவழியாக ஆட்சிக்கு ஒருவர்; கட்சிக்கு ஒருவர் என ரஜினிகாந்த் எடுத்த நிலைப்பாட்டை மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏற்க மறுத்ததுதான் காரணம் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் ஆட்சியில் யார் முதல்வர் என்கிற விவாதம் சூடுபறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நாளை முக்கிய அறிவிப்பாம்
இந்நிலையில் மீண்டும் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சென்னையில் நாளை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பைத் தொடர்ந்து தமது கட்சி தொடர்பான முக்கியமான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

நாளையாவது வெளியிடுவாரா?
30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்தும் அரசியலும் என்கிற நாடகம் தமிழகத்தில் நடந்து கொண்டே இருந்தது. இப்போதாவது இந்த மிக நீண்ட நாடகத்துக்கு ஒரு முடிவுரை எழுதப் போகிறாரே ரஜினிகாந்த் என்கிற நிம்மதி இப்போது இருக்கிறது. நாளைக்கும் வேதாளம் முருங்கை மரம் ஏறினால் ஆச்சரியப்படுவதற்கும் இல்லை.
-
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications