அரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி?.. இன்று அறிக்கை ரிலீஸ்?.. பரபரக்கும் போயஸ்!
சென்னை: இன்று மாலைக்குள் (டிசம்பர் 1) ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முன்னதாக நேற்று மாலை ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகருடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து நேற்று பலதரப்பட்ட மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் மாநில நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். மாலை 4.30 தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் 6.30 மணிக்கு முடிவடைந்தது. இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்
அரசியல் பிரவேசம்
நேற்று காலை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், அரசியல் பிரவேசம் குறித்த முடிவை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார். இன்று மாலைக்குள் ரஜினி தரப்பில் இருந்து அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது. அந்த அறிக்கையில் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய தகவல்கள் இடம் பெறுகிறது.
இன்று மாலைக்குள் அறிக்கை
அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து மாநில நிர்வாகியான சுதாகருடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையின் என்னென்ன முடிவுகளை எடுக்கலாம்?
ஆலோசனை
அது போல் அந்த அறிக்கையில் என்னென்ன விஷயங்கள் இடம் பெறலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆலோசனையில் ரஜினி, சுதாகரை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. ரஜினிகாந்த் மற்ற யாரையாவது சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.
தெளிவான முடிவு
ரஜினி ஏற்கெனவே பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டார். அது போல் மாவட்ட நிர்வாகிகளையும் நேற்று காலை சந்தித்துவிட்டார். இதனால் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அது குறித்து இன்று தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிகிறது.