தமிழ்த்தாய் வாழ்த்து பஞ்சாயத்து.. உதயநிதிக்கு ஓடோடி வந்த ராமதாஸ்! அரசியலாக்க வேண்டாமாம்
சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழைகளுடன் பாடப்பட்ட சம்பவம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. ஆளுநர் தப்பா பாடினா மட்டும் குறை சொல்றீங்களே.. என பாஜகவினர் உதயநிதி மீது விமர்சனங்களை அடுக்கினர். இந்நிலையில், இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
என்ன பஞ்சாயத்து?: சமீபத்தில் சென்னையில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகத்தில் இந்தி மாத நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானபோதே, அதை திமுக, திக, சிபிஎம், விசிக, காங்கிரஸ், பாமக என ஏறத்தாழ அனைத்த அரசியல் கட்சிகளும் வேறுபாடின்றி கண்டித்திருந்தன. திக மாணவர் அமைப்பினர் போராட்டம் கூட நடத்தியிருந்தனர். இந்த எதிர்ப்புகளுக்கு வலு சேர்க்கும் விதமாக, நிகழ்ச்சியில் சம்பவம் ஒன்று நடந்தது.

அதாவது, நிகழ்ச்சியின் தொடக்கத்தின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த பாடலில் 'திராவிடர் நல் திருநாடும்' என்றும் வரி வரும். ஆனால் இந்த வரியை தவிர்த்துவிட்டு பாடல் பாடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் இந்த செயலுக்கு எதிராக கடுமையாக கொந்தளித்தது.
இப்படி இருக்கையில், முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழைகளுடன் பாடப்பட்டது. நாங்க பாடினா மட்டும் தப்பு சொல்றீங்களே.. இதுக்கு என்ன சொல்லப்போறீங்க? என பாஜகவினர் திமுகவை சோஷியல் மீடியாக்களில் ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர்.
இதற்கு எதிராக திமுகவினர் விளக்கம் அளிக்க, அதை ஏற்காத பாஜகவினர் மேலும் மேலும் பஞ்சாயத்தை இழுக்க.. சோஷியல் மீடியா ரத்த பூமியாக மாறியிருக்கிறது.
இச்சூழலில்தான் பாமக நிறுவனர் ரமதாஸ் உதயநிதிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழைகளுடன் பாடப்பட்டுள்ளது. அது சுட்டிக்காட்டப்பட்டு இரண்டாவது முறையாக பாடப்பட்ட போதும் பிழைகளுடனே பாடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசு நிகழ்ச்சியில் பிழைகளுடன் பாடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ந்த விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பிழையுடன் தான் பாடப்பட்டது. அதில் 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற பகுதி விடுபட்டிருந்தது. அதுவும் வேதனையளிக்கக் கூடியது தான். இரு நிகழ்வுகளுமே மனிதப் பிழைகள்தான்; இரு நிகழ்வுகளிலுமே உள்நோக்கம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பதை தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் அறிவார்கள்.
ஆனால், சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ந்த தவறுக்கு உள்நோக்கம் கற்பித்து ஒரு தரப்பினர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். அதன் எதிரொலியாக இன்றைய நிகழ்ச்சியில் நடந்த தவறை இன்னொரு தரப்பினர் சர்ச்சையாக்குகின்றனர். இரண்டுமே தவறான அணுகுமுறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இனிவரும் காலங்களிலாவது தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையின்றி பாடுவதை உறுதி செய்வதில் தான் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, அரசியலாக்குவதால் எந்த பயனும் இல்லை.
எனவே, சென்னைத் தொலைக்காட்சி நடத்திய விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்காக அந்த நிறுவனம் மன்னிப்புக் கேட்டதைப் போன்று, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்காக அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த துறை மன்னிப்பு கேட்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய தவறு நிகழ்வதைத் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசுகளிலும் உள்ள பணியாளர்களில் சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை பிழையின்றி பாடுவதற்கு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பயிற்சியளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
‘அய்யா பாமக’.. ராமதாஸ் அணியின் புதிய கட்சி! தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்.. தலைவர் யாரு பாருங்க? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications