ரூம் போட்டு.. பெண்ணுடன் உருண்டு புரண்ட "மாஜி"யை ஞாபகம் இருக்கா.. அவருக்கு கொரோனாவாம்..!
முன்னாள் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது
சென்னை: ரூம் போட்டு பெண்ணுடன் உருண்டு புரண்டதாக புகார் எழுந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி ஞாபகம் இருக்கிறதா? அவருக்கு கொரோனாவாம்.. தற்போது ஐசியுவில் உள்ளதாகவும் , தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோலி.. இவர் வீடியோ ஒன்று கடந்த மாதம் திடீரென பரபரப்பை கிளப்பியது.. ஒரு அடையாளம் தெரியாத பெண்ணோடு தனிமையில் உறவு கொண்டிருப்பது போல அந்த வீடியோ வெளியாகியிருந்தது.
அந்த வீடியோவில் ஹோட்டலில் பெட்ரூமில் ஒரு இளம்பெண்ணுடன் ரமேஷ் ஜார்கிகோலி அரைகுறை டிரஸ்ஸிலும், ஆபாசமான முறையிலும் இருப்பது போன்று காட்சிகள் இருந்தன.. அதே படுக்கையில், பெண்ணுடன் படுக்கையில் உருண்டும் புரண்டும் அந்த வீடியோ இருந்தது.

வீடியோ
சம்பந்தப்பட்ட பெண் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், ஷார்ட் பிலிம் ஒன்றை தயாரிக்க அமைச்சரை அணுகியபோது, கர்நாடக பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை தருவதாக உறுதி அளித்திருக்கிறார்.. அப்போதுதான், அமைச்சர் ஹோட்டல் ரூமில் அப்பெண்ணை பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக புகார்கள் கிளம்பின.

இளம்பெண்
இது சம்பந்தமான விசாரணையை சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்... அந்த பெண்ணிடமும் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தி சில தகவல்களையும் பெற்றனர்.. அதேபோல, ரமேஷிடமும் போலீசார் மூன்றரை மணி நேரம் விசாரித்து இருந்தனர். இதனிடையே, தனக்கு காஸ்ட்லியான நகைகளை ரமேஷ் ஜார்கிகோளி, பரிசாக கொடுத்ததாக அந்த இளம்பெண் கூறியிருந்தார்.

நோட்டீஸ்
இதுசம்பந்தமாக மறுபடியும் விசாரணைக்கு ஆஜராகும்படி ரமேஷூக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்... ஆனால், அவருக்கு உடம்பு சரியில்லை என்பதை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதனால், ஏப்ரர் 5 அதாவது இன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக ரமேஷ் ஜாா்கிகோளிக்கு போலீசார் உத்தரவிட்டிருந்தனர்..

எதிர்பார்ப்பு
இதனால் எப்படியும் இந்த முறை விசாரணைக்கு ஆஜராகிதான் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்தான், ரமேஷூக்கு கடந்த ஞாயிறு அன்று இரவு மறுபடியும் உடம்பு சரியில்லாமல் போய் உள்ளது.. இதையடுத்து, பெலகாவியில் உள்ள கோகக் தாலுகா ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்கு அனுமதித்த பிறகு, அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது தெரியவந்துள்ளது..

தீவிரமான சிகிச்சை
தற்போது, ஐசியுவில் தீவிரமான சிகிச்சையில் உள்ளார்.. மூச்சு விடுவதில் சிரமாக உள்ளதாக தெரிகிறது.. மேலும், அவரது ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளதுடன், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளதாகவும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.. அவர் ஏற்கனவே சர்க்கரை நோயாளி என்பதால், டாக்டர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து உள்ளதாகவும், 3-4 நாட்களுக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கும் என்றும் அந்த மருத்துவமனையின் டாக்டர் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications