பாமாயில் வாங்கிட்டீங்களா? ரேஷனில் இனி இந்த பொருளும் கிடையாதா.. தேங்காய் எண்ணெய் வருதா? அரசு முடிவு?
சென்னை: விவசாயிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், தேங்காய் விவசாயிகள் கோரிக்கை வைத்தபடியே உள்ளனர்.

கொள்முதல் : கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என்றும், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் உடனடியாக விற்பனை செய்ய என்றும், உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு, விவசாயிகள் சங்கம் போன்ற பல்வேறு விவசாய அமைப்புகள் இதே கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.
ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. மேலும், திமுக அரசு ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் நிறைவேற்றவில்லை. எனவே, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்..
பாமாயில்: உடலுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்க கூடிய பாமாயில் எண்ணெயை அரசாங்கம் விற்பனை செய்வது ஏன்? திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னது என்னாச்சு? பாமாயில் விற்பனை செய்வதால் அரசுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது என்றும் கேள்விகளை எழுப்பினார்கள்.
இந்நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.. இதனால், திருப்பூர் - கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. விவசாயிகள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயிகள்: முன்னதாக கைதான விவசாயிகள் சொல்லும்போது, "உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு ஊக்குவிப்பு செய்யாமல், மானியம் வழங்காமல், இந்தோனேசிய- மலேசியா பாமாயிலை லிட்டர் ரூ. ரூ.100க்கு மத்திய, மாநில அரசுகள் வாங்கி ரூ.30க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இதனால், ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் மானியம் கொடுத்து விற்பனைசெய்து கொண்டிருக்கிறது
ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது.. வருடந்தோறும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் ரூ.1500 கோடிகளை மானியமாக பாமாயில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
நஷ்டம்: கடந்த 2019ல் ரூ.20 க்கு விற்பனையை கொண்டிருந்த தேங்காய், இப்போது ரூ.10க்கு மட்டுமே விற்பனையாவதால் 22 மாவட்டங்களில் உள்ள தமிழ்நாட்டின் 20 லட்சம் தென்னை விவசாயிகள் கடுமையான நஷ்டத்தில் இருக்கிறார்கள்.. கூலி கூட கிடைக்காமல் கடும் கஷ்டத்தில் உள்ளார்கள். அதனால், பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும்... பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும்" என்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications