நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி குறைப்பு! பயணிகள் அதிருப்தி
சென்னை: நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் சாமானிய மக்கள் பயணிக்கும் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு பதிலாக, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மாவட்ட மக்களின் தேவைக்காக தினமும் திருநெல்வேலிக்கு சென்னையிலிருந்து நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது இரவு 8.40 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி என காலை 6.40 மணிக்கு 10 மணி நேரம் பயணித்து திருநெல்வேலிக்கு சென்று சேர்கிறது.

அதேபோல இரவு திருநெல்வேலியிலிருந்து 8.40 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்து சேர்கிறது. இது சூப்பர் பாஸ்ட் ரயிலாக இருந்தாலும் பல நிறுத்தங்களில் நின்று செல்வதால் தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதில் ஸ்லீப்பர் வகுப்பு கட்டணம் ரூ.395 ஆகவும், மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.1,040, 2ம் வகுப்பு ஏசி ரூ.1,460, முதல் வகுப்பு ஏசி ரூ.2,440 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ரயிலில் மொத்தம் 21 பெட்டிகள் இருக்கின்றன. இதில் உணவு தயாரிப்புக்காக ஒரு பெட்டியும், லக்கேஜ் ரேக்குக்காக ஒரு பெட்டி என கழித்துவிட்டால் மொத்தம் 19 பெட்டிகள். இதில் என்ஜினுக்கு பின்னால் 2 பெட்டிகளும், கடைசியாக இரண்டு பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கு ஒதுக்கப்படும். மீதம் உள்ளவற்றில் 8 பெட்டிகள் ஸ்லீப்பர் பயணிகளுக்கு, அதாவது ரூ.395 கொடுத்து டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகளுக்கு ஒதுக்கப்படும்.
மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பயணிகளுக்கு 5 பெட்டிகளும், முதல் வகுப்பு ஏசி பயணிகளுக்கு 2 பெட்டிகளும் ஒதுக்கப்படும். இப்போது சிக்கல் என்னவெனில், ஸ்லீப்பர் பயணிகளுக்கு என ஒதுக்கப்பட்ட 8 பெட்டிகளில் ஒன்று குறைக்கப்பட்டு, 7 பெட்டிகளாக மாற்றப்பட்டிருக்கிறது. இதை ஈடுகட்ட மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் கூடுதலாக ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் ரயில் பயணத்தை அணுகுவது சவாலானதாக மாறியிருக்கிறது.
இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், "ஒரு ஸ்லீப்பர் பெட்டிதானே என்று சாதாரணமாக இதை கடந்துவிட முடியாது. ஒரு பெட்டியில் 72 பயணிகள் வரை பயணிக்க முடியும். தெற்கு ரயில்வேயின் இந்த பெட்டி குறைப்பால், 72 சாமானிய பயணிகள் இனி எங்கு போவார்கள்? கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.250-300 என்றுதான் இருக்கிறது. இவர்களை போன்ற ஏழை மக்களுக்காககத்தான் இந்த பெட்டிகள் இருக்கின்றன. இதையும் குறைத்துவிட்டால்.. அவர்களால் எப்படி பயணிக்க முடியும்? ஏசி பெட்டியில் ரூ.1040 கொடுத்து பயணிக்க முடியாது" என்று கூறியுள்ளனர்.

நெல்லை எக்ஸ்பிரஸ் மட்டுமல்லாது, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பெட்டிகள் குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பயணிகள், தெற்கு ரயில்வே தனது முடிவை வாபஸ் பெற வேண்டும். சாதாரண ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications